ஓரே அறிவிப்பில் 8 வருடத்தை முழுங்கிவிட்டார் முகேஷ் அம்பானி..!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் ஒரே காரணத்திற்காக அறிமுகமாகி 6 மாதங்கள் முடியும் நேரத்தில், 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

இது நாள் வரை ஒரு பைசா கூட வாங்காமல் இலவசே சேவையை அளித்து வந்த ஜியோ, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டெலிகாம் சேவைக்கான கட்டணத்தை வசூல் செய்ய முடிவு செய்துள்ளது.

இதனால் இந்திய சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களும் இந்நிறுவனத்தில் முதலீட்டை வாரி இறைத்துள்ளனர். இதனால் இன்று ஓரே நாளில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 8 வருட வளர்ச்சியை நேற்று அடைந்தது.

ஆனால் வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 2 சதவீதம் சரிந்து இதன் பங்குகள் 1182.60 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

புதன்கிழமை 8 வருட உயர்வை அடைய என்ன காரணம்..?

ஏப்ரல் 1 முதல் வருமானம்

ஏப்ரல் 1 முதல் வருமானம்

செவ்வாய்க்கிழமை ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 303 ரூபாய் என்ற கட்டணத்தை அறிவித்து இனி ஜியோ வருமானத்தை ஈட்ட துவங்கும் என அறிவித்தார்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இதனால் முதலீட்டாளர்கள் புதன்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் மீது அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர். இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 11.17 சதவீதம் உயர்ந்து 1,209.80 ரூபாய் என்ற நிலையை அடைந்தது.

 

 

8 வருட உயர்வு

8 வருட உயர்வு

இதன் மூலம் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 8 வருட உயர்வைச் சந்தித்துள்ளது.

12 லட்ச பங்குகள் வர்த்தகம்

12 லட்ச பங்குகள் வர்த்தகம்

புதன்கிழமை வர்த்தகத்தின் துவக்கத்தில் ஒரு மணிநேர வர்த்தகத்தில் மட்டும் சுமார் 12 லட்ச பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 2 வாரச் சராசரி வர்த்தக எண்ணிக்கையே 2.18 லட்ச பங்குகள் தான்.

8 வருட வளர்ச்சியை அடையும் அளவிற்கு அந்த அறிவிப்பில் என்ன இருந்தது.?

 

303 ரூபாய்க்கு அதிரடி சேவைகள்

303 ரூபாய்க்கு அதிரடி சேவைகள்

ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ஜியோ நியூ இயர் ஆஃபரை மார்ச் 31-க்கு பிறகும் 12 மாதங்கள் வரை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மார்ச் 1 முதல் 31-ம் தேதிக்குள் 99 ரூபாய்க்குப் பிரிமியம் மெம்பர்ஷிப் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் வெறும் மாதம் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் வாயிலாக ஜியோ வாடிக்கையாளர்கள் இலவச வாய்ஸ்கால் சேவை, தினமும் 1 ஜிபி அதிவேக 4ஜி இண்டர்நெட் சேவைகளை 31 மார்ச் 2018 வரை பெற முடியும்.

 

10 நாட்களுக்கு மட்டுமே

10 நாட்களுக்கு மட்டுமே

பிரிமியம் மெம்பர்ஷிப் கட்டணத்தைச் செலுத்த விரும்பாத ஜியோ வாடிக்கையாளர்கள் 303 ரூபாய் பேக் மூலமாக 10 நாட்களுக்கான இந்தச் சலுகைகளைப் பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+