சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் பிரச்சனைகள் பலவற்றுக்கும் மத்தியில் தமிழக அரசு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விமானங்களில் பயன்படுத்தும் உதிரிப்பாகங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்யும் ஏரோஸ்பேஸ் பார்க் அமைப்பதற்காகச் சுமார் 14 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அட்வான்ஸ் கம்பியூடிங் மற்றும் டிசைன் இன்ஜினியரிங் சென்டரை அமைக்கச் சுமார் 350 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.
மேக் இன் இந்தியா
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் விமான மற்றும் அதன் உதிரி பாகங்களின் தயாரிப்புத் துறை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் இத்தருணத்தில் இந்த 14 நிறுவனங்களுக்கான நிலம் ஒதுக்கீடு முதல் தமிழகத்தில் உற்பத்தி மேலும் வலிமை அடைய உள்ளது.
டிட்கோ
தமிழ்நாடு தொழிற்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) தமிழ்நாட்டில் ஏரோஸ்பேஸ் அமைக்க முடிவு செய்து அதற்கான திட்டத்தை அறிமுகம் செய்து. இத்திட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருக்கும் சிப்காட் பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
14 நிறுவனம்
இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 14 நிறுவனங்களுக்குத் தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொலைநோக்கு பார்வை
இத்திட்டத்தின் வாயிலாகத் தமிழகத்தில் ஏரோஸ்பேஸ் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழக அரசு 350 கோடி ரூபாய் முதலீட்டில் அட்வான்ஸ் கம்பியூடிங் மற்றும் டிசைன் இன்ஜினியரிங் சென்டரை அமைக்க முடிவு செய்துள்ளது.
டைடல் பார்க்
மேலும் இதே ஏரோஸ்பேஸ் பார்க்கில் டைடல் பார்க் லிமிடெட் 12 ஏக்கர் அளவு கொண்ட இடத்தில் பல அடுக்க மாடி அலுவலகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான கட்டுமான பணிகள் வருகிற ஜூன்-ஜூலை மாதத்திற்குள் துவங்கும் என டைடல் பார்க் நிறுவனம் தெரிவிட்டுள்ளது.
20 பில்லியன் டாலர்
மத்திய அரசு பாதுகாப்புக்காகச் செலவிடும் தொகையில் 15-20 சதவீத தொகை ராணுவ விமானங்களுக்காகச் செலவிடப்படுகிறது. இதன் மூலம் இத்தொகையின் அளவு 15-20 பில்லியன் டாலர் வரையில் இருக்கும், இந்நிலையில் விமானத் துறையின் வளர்ச்சிக்குத் தமிழகம் முக்கியப் பங்கு விகிப்பது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வருவாய் பெற உள்ளது.
வேலைவாய்ப்பு
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications