அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அன்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காள அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அன்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காள அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
டிரம்ப்பின் புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு நடைமுறைக்கு வந்தால் நன்கு படித்த திறமையுள்ள இந்தியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான புதிய பாதையாக இது அமையும்.
சரி, இது எப்படி உதவும்..?
தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு தனிநபரின் பணிபுரிந்த வரலாறு மற்றும் படிப்பு சான்றுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
இது குறித்த மசோதா பற்றி ஆராய்ந்து வரும் நிலையில் இதே போன்ற விதிகளை வளர்ந்த நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளன.
இதில் இந்தியர்களுக்கு என்ன உள்ளது?
இந்தியர்கள் தற்போது உள்ள சூழலில் தகுதி அடிப்படியிலான அமைப்பிற்கு மிகுந்த பொருத்தம் உடையவர்கள்.
பேவ் அறிக்கையின் படி அமெரிக்காவில் உள்ள 70 சதவீத இந்தியர்கள் கல்லூரி படிப்பை முடித்தவர்கள். அதிலும் பலர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்.
அமெரிக்காவில் உள்ள இந்திய குடும்ப வருமானம்
2013-ம் ஆண்டு அமெரிக்கச் சென்சஸ் பீரோ நடத்திய ஆய்வின் படி இந்திய நடுத்தரக் குடும்பங்களின் வருமானம் 100,000 டாலர்கள் என்பது குறிப்பிடப்பட்டது.
இது சரிப்படுமா?
தற்போது உள்ள டிரம்ப் தலைமையிலான அரசு இதைப் பற்றிக் கடுமையாக விவாதிக்கும் என்றும் இதனால் ஏழை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும், குறைந்த திறன் உடைய ஊழியர்கள் அமெரிக்கா வருவது பாதிக்கும் என்றும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து எதிராகப் பாரபட்சமாக உள்ளதாகவும் பார்க்கப்படுகின்றது.
இதைப் பிற நாடுகள் எப்படிச் செய்கின்றன?
கனடாவில், குடியேற்றம் விண்ணப்பதாரர்களுக்குக் கல்வி, திறன் மட்டங்கள், வேலைவாய்ப்பு, மொழி மற்றும் குடும்ப உறவுகள் போன்ற பல்வேறு தகுதிகளுக்கான புள்ளிகளை உள்ளன.
பிற நாட்டவர் அங்குக் குடியேற அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்பதற்கு ஏற்றக் குறைந்த பட்ச மதிப்பெண் பெற வேண்டியது அவசியம்.
காத்திருப்பு பட்டியல் குறையுமா?
ஆண்டிற்கு 140,000 நபர்கள் அமெரிக்காவில் ஊழியர்கள் சார்ந்த க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் பல இந்திய ஊழியர்கள் 12 வரை காத்திருக்கும் சூழல் நிலவி வருகின்றது. தகுதி விலக்கு உடையவர்கள் மட்டும் 9 வருடத்தில் க்ரீன் கார்டு பெற முடிகின்றது.
தகுதி வாரையிலான அமைப்பு பின்பற்றப்பட்டால் இந்தக் காத்திருப்பு பட்டியல் குறைய வாய்ப்புள்ளது.
குடும்பங்களின் நிலை என்ன?
இப்படி விதிகள் மாற்றப்படும் போது அண்ணன், தம்பி, அக்கா, பெற்றோர் போன்றவர்கள் குடியேறுவது பாதிக்க வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications