நாட்டின் மிகப்பெரிய தபால் சேவை அமைப்பான் இந்தியா போஸ்ட், பேமெண்ட் வங்கி சேவைகளை அளிக்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற நிலையில் அதற்கான பணிகளை மிகப்பெரிய துரிதமாகச் செய்து வருகிறது.
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தபால் சேவை அமைப்பான் இந்தியா போஸ்ட், பேமெண்ட் வங்கி சேவைகளை அளிக்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற நிலையில் அதற்கான பணிகளை மிகப்பெரிய துரிதமாகச் செய்து வருகிறது.
இதற்கான தொழில்நுட்ப உதவியை அளிப்பது யார் என்பதே தற்போது ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டியாக உள்ளது. காரணம் இதன் மதிப்பு 800 கோடி ரூபாய்
இந்திய தபால் துறை
இந்தியா முழுவதும் ஒவ்வொரு கிராமங்களிலும் கிளைகளைக் கொண்டு இருக்கும் தபால் துறை மூலம் இந்தியாவின் ஒவ்வொரு மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்கும் எண்ணத்தில் அடுத்தச் சில மாதங்களில் இந்திய தபால் துறை தனது பேமெண்ட்ஸ் வங்கி சேவையை அளிக்கும் துவங்க உள்ளது. இதன் அறிமுகம் இந்திய வங்கி சேவையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
800 கோடி ரூபாய்
இப்புதிய வங்கியின் தொழில்நுட்ப தேவையைப் பூர்த்திச் செய்யும் 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை யார் வாங்கப் போகிறார்கள் என்ற போட்டி ஹெச்பி, பிடெலிட்டி நிறுவனங்கள் மத்தியில் வலுக்கிறது.
இரு நிறுவனங்கள் முக்கியப் பங்கு
அடுத்தச் சில நாட்களில் இந்த ஆர்டர்களுக்கான ஆர்டர் இந்திய போஸ்ட் அறிவிக்க உள்ள நிலையில் இறுதிக்கட்ட போட்டியில் ஹெச்பி, பிடெலிட்டி ஆகிய இரு நிறுவனங்கள் முக்கியப் பங்கு விகிப்பதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
ஹெச்பி நிறுவனம்
இந்நிலையில் ஹெச்பி நிறுவனம் இன்போசிஸ் துணையுடன் இப்போட்டியில் குதித்துள்ளதால், இந்த ஆர்டரை பெறும் அதிகளவிலான வாய்ப்பு இக்கூட்டணிக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிடெலிட்டி நிதி சேவை
பிடெலிட்டி நிதியியல் சேவை நிறுவனம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சிறப்பான நிதி சேவையை அளித்தாலும் இந்த ஆர்டர் பெறுவதற்கு அதிகளவிலான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி
ஏற்கனவே பேடிஎம் நிறுவனத்தின் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் ஈகாமர்ஸ் சேவைக்கு இன்போசிஸ் உதவியைப் பெற்றுள்ள நிலையில், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தைப் பெற ஹெச்பி மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
டிசிஎஸ்
இப்போட்டியில் டிசிஎஸ் நிறுவனமும் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையோ, தகவல்களையோ டிசிஎஸ் வெளியிடவில்லை.
11 நிறுவனங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் 11 நிறுவனங்களுக்குப் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை அளிக்க உரிமம் வழங்கியுள்ளது. இதில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்று.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications