மூன்றாம் நபர்களுக்கான காப்பீடு என்றால் வாகனத்தை ஓட்டுபவருக்கான காப்பீடு திட்டமாகும்.
வருகின்ற ஏப்ரல் 1 முதல் மூன்றாம் நபர்களுக்கான மோடார் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணங்களை 50 சதவீதம் வரை உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மூன்றாம் நபர்களுக்கான காப்பீடு என்றால் வாகனத்தை ஓட்டுபவருக்கான காப்பீடு திட்டமாகும்.
இந்தியாவில் பெரும்பாலானவர்கள் வாகனங்களுக்கு மட்டுமே காப்பீடு எடுக்கின்றனர், இதனால் விபத்து ஏற்படும் போது வாகனங்களுக்கு மட்டும் காப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மூன்றாம் நபர்களுக்கான காப்பீட்டை மத்திய அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) சில வாகனங்களுக்கு 30 சதவீதமும், சில தனியார் கார்களுக்கு 50 சதவீதம் வரையிலும் காப்பீடு கட்டணத்தை உயர்த்துவதற்கான ஒரு வரைவு திட்டத்தை உருவாக்கியுள்ளது.
கார்கள்
கார்கள் என்றால் அனைத்து வாகனங்களுக்கு இந்தக் கட்டணம் உயர்வு இல்லை. 1000 சிசி வரையிலான கார்களுக்குக் காப்பீடு கட்டணம் உயர்வு ஏதும் இல்லை. இப்போது 1000 சிசி கார்களுக்கு 2,055 ரூபாய் வரை பிரீமியம் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
1000 முதல் 1500 சிசி கார்கள்
1000 முதல் 1500 சிசி கார்கள் மற்றும் எஸ்யூவி கார்களுக்கு 2,237 ரூபாயாக இருந்து காப்பீடு பிரீமியம் கட்டணம் 3,355 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
> 1500 சிசி
1500 சிசிக்கும் அதிகமாக உள்ள கார்களுக்கு 6,164 ரூபாயாக இருந்த காப்பீடு கட்டணம் 9,246 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக வாகனங்கள்
சரக்கு வாகனங்களுக்கு 50 சதவீதம் வரை காப்பீடு பிரீமியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 6 எச்பி வரையிலான டிராக்டர்களுக்கு 510 ரூபாயாக இருந்த பிரீமியம் கட்டணம் 765 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு சக்கர வாகனங்கள்
75 சிசி-க்கும் குறைவான இரண்டு சக்கர வாகனங்களுக்குக் காப்பீடு கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. 75 முதல் 150 சிசி வாகனங்களுக்கு 619 ரூபாயாக இருந்து காப்பீடு கட்டணத்தை 720 ரூபாயாக உயர்த்தி உள்ளனர்.
150 முதல் 350 சிசி வரையிலான வாகனங்களுக்கு 693 ரூபாயாக இருந்த காப்பீடு தொகை 978 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
350 சிசி-க்கும் அதிகமான வாகனங்களுக்கு 796 ரூபாயா இருந்த காப்பீடு கட்டணம் 1,194 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
விண்டேஜ் கார்கள் மற்றும் இ-ரிக்ஷா
விண்டேஜ் கார்கள் 25 சதவீதம் வரை காப்பீடு கட்டணம் குறையவும், இ-ரிக்ஷாக்களுக்கு உயரவும் வாய்ப்புள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications