பாராளுமன்றத்தில் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பே நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் இதனால் ஏப்ரல் 1 முதல் அமைச்சர்களால் நலப்பணிகளுக்கான நிதிகளைப் பெற முடியும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நிதி மசோதா என்பது ஆண்டு நிதிநிலை கூட்டம் முடிவடைந்த பிறகு மக்களவைவில் அறிமுகப்படுத்தப்படும், இதில் இந்த நிதி ஆண்டிற்கான நிதி கொள்கைகள் அனைத்தும் எப்படிச் செய்யவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அதுமட்டும் இல்லாமல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2017-ம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட பொது நிதி விதிகளையும் அறிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தைப் பிப்ரவரி இறுதியில் துவங்குவதால் நிதி ஒதுக்கீடுகள் செய்யத் தாமதமாகின்றது என்றும் இதனால் நலத்திட்டங்கள் முழுமைபெறாமல் ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுவதுமாக மக்களைச் சென்றடையாமல் தேங்கி நிற்கின்றது என்றும் அதனால் ஒரு மாதம் முன்பே பட்ஜெட் கூட்டத்தைத் துவங்கி ஏப்ரல் 1 முதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறிய மத்திய அரசு அதே போன்று பட்ஜெட் 2017-2018 கூட்டத்தைப் பிப்ரவரி 1 தேதியே துவங்கி பட்ஜெட் தாக்கல் செய்தது.