இந்தியாவில் வீடு வாங்க இதுவே சரியான நேரம்..!!
சென்னை: 2016ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு உட்படப் பல்வேறு காரணங்களுக்காக ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய அளவிலான சரிவை அடைந்தது. இதன் காரணமாகக் கோடிகளில் மதிப்பிடப்பட்ட பல திட்டங்கள் பல லட்சங்கள் வரை குறைந்து, இத்துறை முற்றிலும் முடங்கியது.
இந்நிலையில் இந்தியாவில் 8 நகரங்களில் வீட்டு மனைகள் விலை அதிகளவில் குறைந்துள்ளது.
14 சதவீதம் குறைவு
இந்திய வர்த்தகச் சந்தையின் முக்கியமான 8 நகரங்களில் வீட்டு மனை மற்றும் திட்டங்களின் அறிமுகம் 14 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் குஷ்மன் மற்றும் வேக்பீல்டு தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இத்துறையில் ஏற்பட்ட விலை சரிவு தான்.
இந்தச் சரிவு 2016ஆம் ஆண்டில் மட்டும் அல்லாமல் 2017ஆம் நிதியாண்டிலும் தொடரும் எனவும் இந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு ஜாக்பாட்
இந்நிலையில் பெரு நகரங்களில் ஆடம்பர திட்டங்கள் கூடத் தற்போது அதிகமானோரால் வாங்கத் திட்டமிடப்பட்டு வருவாதவும் இந்த ஆய்வு கூறுகிறது.
எனவே அடுத்தச் சில மாதங்களுக்கு இந்திய ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருக்கும் காரணத்தால் வீடு மற்றும் வீட்டுமனைகள் வாங்க விரும்புவோருக்கு இதுவே சரியான நேரம். அடித்துபிடித்து விலை பேசி வாங்க முடியும்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்
பணமதிப்பிழப்புப் பின் இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைக் காத்துக்கொள்ளப் பல முயற்சிகளைச் செய்துவருகிறது.
இதில் முக்கியமாக விலைகுறைப்பு, புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதில் தாமதம், சந்தைப்படுத்துவதில் புதுமைகள், தொகையைச் செலுத்துவதில் மாற்றம் எனப் பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
விற்பனையில் முடக்கம்
மேலும் இந்தியாவில் பல பகுதிகளில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டும், வீட்டு மனைகள் முழுமையாகத் தயாரான நிலையிலும் சரியான பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் விற்பனை ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது.
ரியல் எஸ்டேட்
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications