முகேஷ் அம்பானியின் ஜியோவும், விஜய சேகர் சர்மாவின் பேடிஎம் நிறுவனமும் அனுமதியின்றித் தங்களது நிறுவனத்தின் விளம்பரங்களில் 2016-ம் ஆண்டுப் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தினர்.
எனவே இரண்டு நிறுவனங்களுக்கும் எதனால் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், அல்லது புகைப்படத்தைப் பயன்படுத்த அனுமதி பெற்றார்களா என்று மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது.
அபராதம்
இதற்காகக் கடிதம் மூலமாக நுகர்வோர் விவகார அமைச்சகம் அபராதங்கள் விதிக்க முடியும் என்றும் கடிதம் எழுதியிருந்தது.
ரிலையன்ஸ் ஜியோ விளம்பரம்
செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளைத் துவங்கிய உடன் 4ஜி சேவைக் குறித்த விளம்பரத்தில் மோடியின் டிஜிட்டல் இந்தியாவை வரவேற்பதாக விளம்பரம் செய்திருந்தது.
பேடிஎம் விளம்பரம்
பின்னர், நவம்பர் மாதம் செல்லா ரூபாய் நொட்டுகளைப் பிரதமர் மோடி அறிவித்த உடன் தங்களது டிஜிட்டல் வாலெட் விளம்பரத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் மோடியின் படத்தைப் பேடிஎம் நிறுவனம் பயன்படுத்தியிருந்தது.
மன்னிப்பு
இதற்கான நோட்டிஸை பெற்ற ரிலையனஸ் ஜியோ மற்றும், பேடிஎம் நிறுவனங்கள் இரண்டும் இப்போது முறைப்படி மன்னிப்பு கேட்டுள்ளன.