கர்நாடக மாநில அரசில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் என்ற பெருமையுடன் இன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.
மத்தியில் பிரதமர் மோடிக்கு இந்த 5 மாநில தேர்தல்கள் எவ்வளவு முக்கிமோ அதைவிட முக்கியமானது சித்தராமையா இந்தப் பட்ஜெட் காரணம். 2018ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் ஏப்ரல் மாத்தில் நன்ஜான்குட் மற்றும் குன்டுலுபெட் பகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. இதனால் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மிக முக்கியமாக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டே சித்தராமையா இன்று ஜிஎஸ்டி அமலாக்கத்தைக் கொண்டு விரி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 1.86 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை அறிவித்துள்ளார்.
மேலும் நாளை தமிழ்நாட்டின் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.