ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் இன்று புதன்கிழமை சராசரியாக 9 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகம் ஆனது. அது மட்டும் இல்லாமல் உள்நாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா போஸ்ட்பெய்டு மற்றும் பிரீபெய்டு என இருவருக்கும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
ஜியோவிற்குப் போட்டியான 4 திட்டங்கள்
ஐடியா நிறுவனம் விரைவில் ஜியோவிற்குப் போட்டியாக ஐடியா செலக்ட் டைட்டானியம், ஐடியா செலக்ட் பிளாட்டினம், ஐடியா செலக்ட் கோல்டு, ஐடியா செலெக்ட் சில்வர் நான்கு புதிய ஆஃபர்களை வெளியிட இருக்கிறது.
பிரீமியம் திட்டம்
ஐடியா செலக்ட் டைட்டானியம் தான் இந்த நான்கு திட்டங்களில் பிரீமியம் திட்டம். இத்திட்டத்தில் பல சலுகைகள் இருக்கும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைப்பின் மதிப்பு
ஏற்கனவே ஐடியாவுடன் வோடாபோன் இணைய இருக்கும் நிலையில் விரைவில் இந்த மிகப் பெரிய இணைப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு நிறுவனங்களும் இணைய இருக்கும் இந்த ஒப்பந்தம் 21 பில்லியன் யூரோ மதிப்புடையது. இந்த இணைப்பிற்குப் பிறகு இரண்டு நிறுவனங்களிடமும் சரி பாதியான பங்குகள் இருக்கும்.
பங்குகளின் நிலை
மாலை 3 மணி நிலவரப்படி 9.32 சதவீதம் உயர்ந்து 112.65 சதவீதமாக ஐடியா நிறுவனப் பங்குகள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.