இந்திய மென்பொருள் ஏற்றுமதி சந்தையின் தலைமையிடமாக விளங்கும் கர்நாடக மாநிலம் கடந்த சில வருடங்களாக மென்பொருள் துறையை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்க வேண்டாம் என உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களையும் ஈர்த்து தனது மாநில வர்த்தகத்தை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டுச் சட்டசபை தேர்தலை இம்மாநில சந்திக்கும் நிலையில் அடுத்த முறையும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தோடு, முதல்வர் சித்தரமையா தலைமையிலான அரசு புதன்கிழமை(இன்று) 2017-18ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இந்தப் பட்ஜெட்டில் மக்கள் நலன் மட்டும் அல்லாமல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பல முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.