தமிழகப் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகின்றது..!

தமிழகப் பட்ஜெட் மார்ச்-16 நாளை தாக்கல் செய்யப்படுகின்றது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னாள் தமிழக முதல்வர் இறந்த பிறகு பல சர்ச்சைகளுக்குப் பிற புதிதாகப் பொறுப்பேற்று உள்ள எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வியாழக்கிழமை மார்ச் 16-ம் தேதி தனது முதல் நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க இருக்கின்றது.

2017-2018 நிதி ஆண்டிற்கான தமிழக நிதிநிலையினை முதல் முறையாகத் தமிழக நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று உள்ள டி.ஜெயகுமார் மார்ச் 16-ம் தேதி 10:30 மணிக்குத் தாக்கல் செய்ய இருக்கின்றார்.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது..!

அரசுத் துறை வட்டாரங்களில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி தமிழகத்தின் புதிய கவர்னர் மார்ச்-16ம் தேதி பொறுப்பேற்கலாம் என்றும் இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.

வரும் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை 23-ம் தேதிக்குள் பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும், அதே போன்று முன்பண மானியக் கோரிக்கைகள் 23-ம் தேதி அன்று அளிக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலும் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடப்பெற இருக்கின்றது. இதனை அடுத்து ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருப்பதால் அதிமுக அரசு நாளை பட்ஜெட் தாக்கலின் போது ஜெயலலிதா இலவசங்களை அறிவித்ததைப் போல் தற்போதைய அரசும் அறிவிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுவதை அடுத்து மார்ச் 20-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu Budget presentation on March 16

Tamilnadu Budget presentation on March 16
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X