சென்னை: தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் ஆதிமுகக் கட்சி பல குழப்பங்கள், பிரிவுகள் ஏற்பட்டு அனைத்துப் பிரச்சனைகளும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர்த் தணிந்துள்ள நிலையில் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை இன்று நிதியமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்ய உள்ளார்.
ஜெ. சமாதி
இதற்காக நிதியமைச்சர் காலை 9.15 மணிக்கு நிதியமைச்சர் ஜெயகுமார் ஜெ. சமாதிக்கு வந்தது ஜெ சமாதியை வணங்கி, ஆசீர்வாதம் பெற்றார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர்.
அம்மா வழியில்
செய்தியாளர்களிடம் பேசி ஜெயகுமார், மக்களுக்கு அதிகளவில் பயன் அளிக்கும் திட்டங்களை வகுக்கவேண்டும் என்னும் அம்மா வழியமைத்த பாதையிலேயே தாங்களும் பயணிப்பதாக அவர் தெரிவித்தார்.
10.30 மணிக்கு பட்ஜெட்
ஜெ. சமாதியில் இருந்து நேரடியாகத் தலைமை செயலகத்திற்குச் செல்லும் நிதியமைச்சர் ஜெயகுமார் சரியாக 10.30 மணிக்கு 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார் ஜெயகுமார்.
ஒரு மாதத்தில் பட்ஜெட்
பிப்.16ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில் மார்ச் 16ஆம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யப்பட உள்ளதால் பொதுமக்கள் மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தையிலும் இந்தப் பட்ஜெட் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
மதிப்பு கூட்டு வரி
ஏற்கனவே தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி அதிகரித்துள்ள காரணத்தால் தமிழ்நாட்டில் விலைவாசியும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எத்தகையைப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யப்படப் போகிறது.?? 10.30 மணி வரை காத்திருங்கள்.