மத்திய அரசு கடந்து சில ஆண்டுகளாக எடுத்து வரும் நிதி கொள்கைகளால் மாநிலங்களின் வருவாயைப் பெரிதளவில் பாதித்து வருகின்றது. அதனால் தான் தமிழகம் நிதி நிலைமை மோசமான நிலையில் உள்ளதாகவும் ஆவடி குமார் தெரிவித்துள்ளார்.
கடந்து 2011-ம் ஆண்டு முதல் கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழகத்தைக் கடந்து 6 வருடங்களாக ஆட்சி செய்து வரும் அதிமுக அரசால் கடன் சுமையைக் குறைக்காமல் இலவசங்களை அறிவித்து மேலும் அதிகரித்த்து தான் வருகின்றது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2.25 லட்சம் கோடியாக இருந்த தமிழக ரசி கடன் சுமை இந்த ஆண்டு 3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. எனவே இந்த நிதிநிலையும் சென்ற ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் பற்றாக்குறை நிதிநிலையாகவே இருக்கும்.
1000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தொழில்துறை வளர்ச்சி குறித்து பெரிய அளவில் நிதிநிலையில் ஏதும் இல்லை என்பதால் நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய வரி வருவாய் இழப்பும் பெரிதளவில் உள்ளது.
இவை மட்டும் இல்லாமல் விரைவில் இந்தியா முழுவதும் ஒரே வரி எனப்படும் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் தமிழகத்தின் வருவாய் மேலும் இழப்பு நேரிடப்படும் என்றும் கூறப்படுகின்றது.