முதல் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் ஜெயகுமார் 2017-18 நிதியாண்டில் அரசின் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி தேவையை 41,965 கோடி ரூபாய் கடன் வாங்குவதன் மூலம் தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசின் கடன் அளவு அதிகளவில் இருக்கும்போது இக்கூடுதல் கடன் சுமை நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும். இதன்படி நிதிப்பற்றாக்குறையின் 2.79 சதவீதமாக இருக்கும்.
2017-18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் ரூ1,59,362 கோடியாக உயரும். இதில் வணிகவரி மூலம் ரூ77,234 கோடி வருவாய் கிடைக்கும் என நிதியமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
மேலும் ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என ஜெயகுமார் கூறினார்.
இக்கூடுதல் கடன் திட்டத்துடன் 2017-18 நிதியாண்டின் முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் அளவு ரூ3.14 லட்சம் கோடியாக உயரும் எனவும் அவர் கூறினார்.
மத்திய அரசு இந்தியாவில் ஜஎஸ்டி வரி முறையை அமலாக்கம் செய்யப்படும் நிலையில், விரைவில் ஜிஎஸ்டி வரி அளவுகளை மத்திய அரசுடன் இணைந்து நிர்ணயம் செய்ய உள்ளது தமிழக அரசு. மேலும் ஜிஎஸ்டி பேச்சுவார்த்தையில் மத்திய அரசுடன் உடன்பாடு செய்யப்பட உள்ளதாக ஜெயகுமார் தெரிவித்தார்.
மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகள் துவங்க உள்ளது இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.