கூடுதலாக ரூ.41,965 கோடி கடன் பெற திட்டம்..!
முதல் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் ஜெயகுமார் 2017-18 நிதியாண்டில் அரசின் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி தேவையை 41,965 கோடி ரூபாய் கடன் வாங்குவதன் மூலம் தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசின் கடன் அளவு அதிகளவில் இருக்கும்போது இக்கூடுதல் கடன் சுமை நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும். இதன்படி நிதிப்பற்றாக்குறையின் 2.79 சதவீதமாக இருக்கும்.

2017-18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் ரூ1,59,362 கோடியாக உயரும். இதில் வணிகவரி மூலம் ரூ77,234 கோடி வருவாய் கிடைக்கும் என நிதியமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
மேலும் ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என ஜெயகுமார் கூறினார்.
இக்கூடுதல் கடன் திட்டத்துடன் 2017-18 நிதியாண்டின் முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் அளவு ரூ3.14 லட்சம் கோடியாக உயரும் எனவும் அவர் கூறினார்.
மத்திய அரசு இந்தியாவில் ஜஎஸ்டி வரி முறையை அமலாக்கம் செய்யப்படும் நிலையில், விரைவில் ஜிஎஸ்டி வரி அளவுகளை மத்திய அரசுடன் இணைந்து நிர்ணயம் செய்ய உள்ளது தமிழக அரசு. மேலும் ஜிஎஸ்டி பேச்சுவார்த்தையில் மத்திய அரசுடன் உடன்பாடு செய்யப்பட உள்ளதாக ஜெயகுமார் தெரிவித்தார்.
மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகள் துவங்க உள்ளது இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications