இனி இவர்களுக்கு 'எச்1பி விசா' அப்ளை செய்யப்போவதில்லை.. இன்போசிஸ் நிர்வாகத்தின் திடீர் முடிவு..!
பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், எச்1பி விசாவில் விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகள் எதிரொலியாக நிறுவனத்தில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
இதன் படி, இனி நிறுவனத்தில் ஒரு பிரிவை சார்ந்தவர்களுக்கு எச்1பி விசா விண்ணப்பிக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இன்போசிஸ் மட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும், தங்களது லாபத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தவும் அதிகளவில் வொர்க் விசாவை நம்பி இயங்கி வந்தது.
அமெரிக்காவில் புதிதாக அமைந்துள்ள டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு விசா கட்டுப்பாடுகள், விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில், தங்களது வர்த்தக வடிவத்தையும், இயங்கும் வடிவத்தையும் மாற்றியமைத்து வருகிறது இந்திய ஐடி நிறுவனங்கள்.
இதன் வாயிலாகவே தற்போது இன்போசிஸ் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இன்போசிஸ்
இனி இன்போசிஸ் நிர்வாகம் 4 வருடம் குறைவாக அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு விசா விண்ணப்பிக்காது.
மேலும் தற்போது அமெரிக்காவில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் இனி அதிகளவிலான பணிகளை ஆப்ஷோரில் வைத்தே செய்யவும், அமெரிக்காவில் இருக்கும் ஜூனியர் பணியாளர்களை இந்திய அலுவலர்களுக்குக் கொண்டு வரவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இன்போசிஸ் நிர்வாகத் தலைவர் ஒருவர் கூறினார்.
சிஸ்டம் இன்ஜினியர்
இன்போசிஸ் நிறுவனத்தில் சிஸ்டம் இன்ஜினியர், சீனியர் சிஸ்டம் இன்ஜினியர் பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு விசா விண்ணப்பிக்கப்பட மாட்டாது என இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பதவிகளில் இவை இரண்டுமே ஆரம்பப் பதவிகளாகும்.
குறைந்தபட்சம் சம்பளம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர், அமெரிக்க ஊழியர்களுக்கு இணையாக எச்1பி விசா பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படை சம்பள அளவு 1,30,000 அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற மசோதாவை சமர்ப்பித்தார்.
இது தற்போதைய அளவுகளைவிடவும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
இன்போசிஸ்
இதனால் அதிக வொர்க் விசாவை கொண்டு அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
இதன் காரணமாகவே இன்போசிஸ் தற்போது இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
வாடிக்கையாளர் திட்டம்..
இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பல இந்திய ஊழியர்கள் தற்போது தாயகம் திரும்பு நிலையில் இன்போசிஸ் அதன் அமெரிக்க வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமெரிக்கக் கல்லூரிகளில் இருந்து மாணவர்களை நேரடியாகப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
150 வேலைவாய்ப்புகள்
இன்போசிஸ் லிங்க்டுஇன் தளத்தில் கடந்த ஒரு மாத்தில் மட்டும் அமெரிக்கச் சந்தையில் மட்டும் சுமார் 150 வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் 2 வருட அனுபவம் சார்ந்த பணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
இந்நிலையில் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ், இந்த வருடம் தனது சராடரி எண்ணிக்கையில் வெறும் 15 சதவீதம் தான் விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பிற ஐடி நிறுவனங்கள்
இன்போசிஸ், டிசிஎஸ் மட்டும் அல்லாமல் விப்ரோ, எச்சிஎல், மைண்டுடிரீ போன்ற நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்திலும் இதேபோன்ற நிலை தான்.
சிடிஎஸ்..
காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஊழியர்களின் குறைந்த திறன் அல்லது பொருத்தமில்லா திறன் காரணமாக 6,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனத்தின் 2-3 சதவீத ஊழியர்களைக் குறைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது சிடிஎஸ்.
தொடர் பணிநீக்கம்
2 வருடங்களுக்கு முன்பு சிடிஎஸ் நிறுவனம் 1 சதவீதமும், 201ஆம் நிதியாண்டில் 2 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
மார்ச் 31, 2017 ஊழியர்களின் தகுதி ஆய்வுகள் முடிவுகள் வெளியான பின்பே எத்தனை சதவீத ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தெரிய வரும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
75 சதவீத ஊழியர்கள்
டிசம்பர் 2016 முடிவடைந்த காலாண்டில், இந்த அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் 2.60 லட்ச ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 75 சதவீத ஊழியர்கள் இந்திய சந்தையில் இருக்கும் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர்.
வேலையில்லா திண்டாட்டம்
முதல் முறையாக..!
#SunTv #chennai
More From GoodReturns

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் IRAN..!! கூகுள், மைக்ரோசாப்ட், IBM-ஐ கட்டம் கட்டி அடிக்க முடிவு..!

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!



Click it and Unblock the Notifications