விரைவில் ஓட்டுநர் உரிமம் பெறவும் ஆதார் கட்டாயம்..!
ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களைக் கண்டறிவதற்காக மத்திய அரசு புதிய ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு ஆதார் அடையாளம் கண்டறிதல் முறை அவசியம் என்றும் இது உரிமத்தை புதுப்பிக்கவும் அவசியம் என்று முடிவு செய்துள்ளது.
இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமம் பெறுவது தடுக்கப்படும் என்றும், மேலும் போக்குவரத்து டிராப்பிக் விதிகளை மதிக்காமல் போனால் அப்போது உரிமத்தை ரத்து செய்யவும் இது பயன்படும் என்றும் மத்திய அரசு கூறுகின்றது.
எப்போது முதல் ஆதார் கட்டாயம்
ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்திப் போலி ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களையும் எளிதாகப் பிடிக்க முடியும் என்றும், இந்த ஆதார் முறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் கட்டாயம் ஆக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ளதாகவும், விரைவில் மாநிலங்கள் வாரியாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்றும், பாதுகாப்பான அமைப்பாக இந்த மாற்றங்கள் இருக்கும் என்றும் இனி ஆர்டிஓ அலுவலகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமங்கள் பெறுவது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
காவல் துறை விசாரணையில் உள்ள சிக்கல்
ஆர்டிஓ அலுவலகங்களில் இப்போது வரை இரண்டு மூன்று ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களைக் கண்டறிய முடியவில்லை என்றும் இதனால் காவல் துறையினரின் விசாரணையிலும் இது பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.
ஒரு ஆவணம் போதும்
ஆதார் கார்டு இருக்கின்றது என்றால் ஓட்டுநர் உறினம் பெறும் போது இது ஒன்றை மட்டும் ஆவணமாகச் சமர்ப்பித்த போதும். ஆதார் கார்டு இல்லாதவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பணிகள் துவக்கம்
ஆர்டிஓ அலுவலகங்கள் இப்படித் தரவுகளைப் பதிவு செய்வதற்கான அனைத்துப் பணிகளும் முடிக்கிவிடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆர்டிஓ அலுவலகங்கள் ஓட்டுநர் உரிமத்தின் வரங்களைச் சரிபார்ப்பதற்கான மத்திய தரவு தளத்தில் இருந்து எளிதாக விவரங்களைப் பெற முடியும். மேலும் முறைகேடாக ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்துகின்றாரா, வேறு மாநிலங்களில் ஆதார் அட்டைப் பெற்றுள்ளார்களா என்பதையும் எளிதாகக் கண்டறிய முடியும்.
கைமுறையாக விவரங்கள்
இதுவரை ஆர்டிஓ அலுவலகங்கள் கைமுறையாகத் தான் விவரங்களைச் சேமித்து வருகின்றன. இதனால் அவர்களால் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களின் விவரங்களைப் பெற முடிவதில்லை.
தேசிய தகவலியல் மையம் வாகனங்களின் விவரங்கள், ஓட்டுநர் உரிமம் உள்ள ஓட்டுநர்கள் விவரங்கள் போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகங்களிடம் இருந்து பெற்றும் தரவுகளை நிர்வகிக்கும்.
போலிகளைக் கண்டறிவது கடினம்
பேப்பர்களாக இருக்கும் அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றும் பணிகள் நடந்து வருவதாகவும், இது ஒரு மிகப் பெரிய சவால் என்றும், போலி மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களை எளிதாகக் கண்டறிவது மிகவும் கடினம் என்றும் கூறுகின்றனர்.
வழங்கப்பட்ட மொத்த ஓட்டுநர் உரிமங்கள்
அதிகாரப்பூர்வமான தகவலின்படி இது வரை மொத்தமாக 18 கோடிக்கும் மேற்பட்டோர் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications