வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குக் கோதுமை இறக்குமதி அதிகரித்துள்ளதைக் கவனித்த மத்திய அரசு 4 மாத இடைவேளைக்குப் பின் அதன் இறக்குமதி வரியை 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இதனை அமலாக்கம் செய்வதில் எவ்விதமான தாமதமும் இருக்கக் கூடாது என உடனடியாக அமலாக்கம் செய்துள்ளது மத்திய அரசு.
இந்திய விவசாயிகள் அறுவடை செய்ய உள்ள இச்சூழ்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கோதுமை அளவைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்து வரியை உயர்த்தியுள்ளது.
மார்ச் மாத துவக்கத்தில் மத்திய அரசு கோதுமை இறக்குமதியின் மீது 25 சதவீத வரி விதிக்கலாம் எனக் கருத்து நிலவி வந்த நிலையில் தற்போது 10 சதவீதம் என்று அறிவித்துள்ளது.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோதுமை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவில் 2016 செப்டம்பர் மாத்தில் இதன் மீதான இறக்குமதி வரி 25 சதவீதமாக இருந்தது. தற்போது இதனை 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.