ஆதார் திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு 34,000 கோடி ரூபாய் சேமிப்பு..!
இந்தியாவில் ஆதார் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மத்திய அரசு சுமார் 34,000 கோடி ரூபாய்ச் சேமித்துள்ளதாக நிதியியல் துறை செயலாளர் அசோக் லவாச தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை அசோச்சாம் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லவாச ஆதார் கார்ட் தகவல்களின் பாதுகாப்புக் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர், ஆதார் திட்டத்தைச் சாதாரணமாக எடைபோட வேண்டாம், இத்திட்டம் இதுவரை பல வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது பான் கார்டு பெறவும், வருமான வரியை தாக்கல் செய்யவும் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
105 கோடி மக்களுக்கு மத்திய அரசு தனிப்பட்ட அடையாளமான ஆதார் எண்ணை அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பல திட்டங்களில் செலவுகள் குறைந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் அரசு திட்டங்களின் பலன்களை அனைத்தும் நேரடியாக மக்களுக்குச் செல்லும் வகையில் ஆதார் திட்டம் விளங்குகிறது என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த 3 வருடங்களாகப் பல கட்ட ஆலோசனைகள் மேம்பாடுகள் மூலம் ஆதார் திட்டத்தை மிகவும் வெளிப்படையாகவும், இடர்பாடுகள் குறைந்த ஒன்றாகவும் தற்போது மெருகேற்றியுள்ளது எனவும் அசோக் லவாச கூறினார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications