மதுரை முதல் சான்பிரான்சிஸ்கோ வரை.. சுந்தர் பிச்சையின் உழைப்பும் வெற்றியும்..!

சுந்தர் பிச்சை: கூகுளின் தயாரிப்பு மேலாளராக இருந்து தலைமை செயல் அதிகாரியாக உருவான கதை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் ஆகஸ்ட் 2015, 10 ஆம் தேதி ஒரு புதிய சிஈஓ வின் நியமனத்தை அறிவித்து உலகை வியப்புற வைத்தது. அது தொழில்நுட்ப துறை நிறுவன தலைமை அதிகாரிகள் பட்டியலில் இந்தியர் ஒருவர் இடம்பெற்று இந்திய சமூகத்திற்கு ஒரு பெருமையான கணம் ஆகும்.

சுந்தர் பிச்சை, உலகம் முழுவதும் இப்போது நன்கு அறியப்பட்ட ஒரு பெயர். ஆனால் அவர் அவ்விடத்தை அடையும் முன் பட்ட போராட்டங்கள் பல.

ஆரம்பக்கால வாழ்க்கை மற்றும் குழந்தைப்பருவம்

ஆரம்பக்கால வாழ்க்கை மற்றும் குழந்தைப்பருவம்

சுந்தர் பிச்சை எனப் பொதுவாக அறியப்படும் பிச்சை சுந்தரராஜன், ஜூலை 12, 1972 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரையில் பிறந்தவர். அவர் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராதலால் தொலைக்காட்சி பார்த்தல் மற்றும் கார் பயணம் போன்ற ஆடம்பரங்களை அனுபவித்ததில்லை.

தந்தை

தந்தை

சுந்தர் பிச்சை அவர்களின் தந்தை ரகுநாத் சென்னையில் ஜெனரல் எலக்டிரிக்கில் ஒரு மின் பொறியாளராகப் பணியாற்றினார். எனவே, அவரது குடும்பம் அங்கே அஷோக்நகரில் வசித்து வந்தது. அவரது தந்தை மின் பொருட்களை உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையில் மேலாளராக இருந்தார். அவரது தந்தை எதிர்கொள்ளும் வேலைச் சார்ந்த சவால் கதைகள் பிச்சையை மிகவும் ஊக்குவித்தன.

தயார்

தயார்

அவரது தாயார், லட்சுமி, குழந்தைகள் பிறக்கும் வரை ஒரு சுருக்ககழுத்தாளராக இருந்தார். சுந்தருக்கு ஒரு இளைய சகோதரரும் உண்டு.

நினைவாற்றல்

நினைவாற்றல்

பிச்சையின் 10 வது வயதில் அவரது தந்தை வீட்டில் ஒரு தரைவழி தொலைப்பேசி வாங்கிய போதுதான் அவர் தொழில்நுட்பத்தை முதலில் அனுபவித்தார்.. அவருக்கு எண்களை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொள்ளும் ஒரு அசாதாரணத் திறமை இருந்தது. டயல் செய்யும் எல்லா எண்களையும் அவரால் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது. . பிச்சை பள்ளியில் எண்களில் திறமையானவர் மட்டுமல்ல அதே நேரத்தில் அவரது உயர்நிலைப் பள்ளி கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.

கல்வி

கல்வி

சுந்தர் அசோக் நகர், ஜவஹர் வித்யாலயாவில் தனது பத்தாம் வகுப்பை முடித்துச் சென்னை வன வாணி பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்தார். பிச்சை பின்னர் ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்றார்.

அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் எம் எஸ்(சயின்ஸில் முதுநிலை) முடித்த பின்னர்ப் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்டன் ஸ்கூல் இருந்து எம்பிஏ முடித்தார்

 

கூகுளுக்கு முன்பான பணி

கூகுளுக்கு முன்பான பணி

சுந்தர் பிச்சை அவரது கூகுளுக்கு முன்பான நாட்களில் மெக்கென்சி & கம்பெனியில் மேலாண்மை ஆலோசனையில் பணி புரிந்தார். அவர் அப்ளைடு மெட்டீரியல்ஸ் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மையிலும் தனது திறமைகள் மூலம் பங்களித்தார்.

கூகுளில் பணி

கூகுளில் பணி

பிச்சை 2004 ல் கூகுளில் சேர்ந்தார், டூல்பார் போன்ற பிரபலமான தயாரிப்புகள் செய்வதில் அவர் பணிபுரிந்ததாகவும் அறியப்படுகிறது. அவர் குரோம் வெளியிடப்படுவதற்கு முன், மற்ற தயாரிப்புகளான கூகுள் கியர்ஸ் மற்றும் கூகுள் பேக்ஸ் இல் பணியாற்றி உள்ளார்.

எனினும், டூல்பார் வெற்றி பிச்சைக்கு வாழ்க்கையில் வேகமாக முன்னேற உதவியது. கூகுள், டூல்பார் பயனர் தேடல்களை அதிகரித்ததைக் கவனித்தது.. இதுவே நாளடைவில் கூகுளின் சொந்த உலாவியான கூகுள் கிரோமின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது.

 

குரோம்  ஓஎஸ்

குரோம் ஓஎஸ்

பிச்சை தயாரிப்பு மேலாண்மைக்குத் தலைமை வகுத்து மேலும் கூகுளின் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகளான கூகுள் குரோம் மற்றும் கிரோம் ஓஎஸ் ஐ கண்டறிந்தார். கூகுளின் கிரோம் ஓஎஸ் மற்றும் உலாவி முன்னணிக்கு வந்ததன் பின்னணியில் இருந்த மனிதர் பிச்சைதான். அவர் 2008 இல் தயாரிப்பு வளர்ச்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் கிரோம் உலாவியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

குரோம் ஓஎஸ் அதனைப் பின் தொடர்ந்தது. பிச்சை 2008 லிருந்து கூகுள் விளக்ககாட்சிகளில் வெளிச்சத்திற்கு வந்தார். மேலும் மிக விரைவில் கூகுள் இணையத்தின் நன்கு அறிந்த முகமாக ஆனார். அவர் 2012 இல் கிரோம் மற்றும் பயன்பாடுகளின் மூத்த துணைத்தலைவர் ஆனார்.

 

அண்ட்ராய்டு சார்ந்த தயாரிப்பு

அண்ட்ராய்டு சார்ந்த தயாரிப்பு

2013 ஆம் ஆண்டில் இருந்து பிச்சை உலகளாவிய நன்கு அறியப்பட்ட ஆளுமையானார். அவர் கூகுளில் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு, அனைத்து அண்ட்ராய்டு சார்ந்த தயாரிப்புகளின் கண்காணியாக, ஆண்டி ரூபின் இன் இடத்தை நிரப்பினார்.

2015 ஆம் ஆண்டில் கூகுளின் நன்கு அறியப்பட்ட லாரி பேஜ், கூகுளிலிருந்து ஓய்வு பெற்று அவர்களது புதிய நிறுவனமான ஆல்ஃபபெட் இன் கிற்குத் தலைமை வகிக்க ஓய்வு பெற்ற போதுதான், சுந்தர் கூகுளின் புதிய சிஈஓ வாக அறிவிக்கப்பட இருந்தார். அந்த ஆண்டின் முற்பகுதியில், அவர் லாரி பேஜ் இன் மூலம் கூகுளின் தயாரிப்பு தலைவராக அறிவிக்கப்பட இருந்தார்.

அவர் மைக்ரோசாப்ட் புதிய தலைமை நிர்வாகி பதவிக்கும் ஒரு போட்டியாளராக இருந்தார் ஆனால் இறுதியில் அப்பதவி சத்யா நாடெல்லா விற்குச் சென்றது.

 

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை

சுந்தர் பிச்சை தன் நீண்டகாலக் காதலி, அஞ்சலி பிச்சையைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் ஐஐடி காரக்பூரில் ஒன்றாகப் படித்தனர். அஞ்சலி மற்றும் சுந்தருக்கு இரண்டு அழகான குழந்தைகள்; ஒரு மகன் மற்றும் ஒரு மகள்.

அவர்கள் $ 6.8 மில்லியனுக்குப் புரூக்ளின், நியூயார்க்கில் ஒரு வீட்டை வாங்கினர். அவர் இப்போது அமெரிக்க நாட்டு குடிமகன் ஆகி தனது குடும்பத்துடன் அங்கு வசிக்கிறார்.

 

சாதனைகள்

சாதனைகள்

சாம்சங் போன்ற கூட்டாளிகளுடன் மென்மையான உறவுகளுக்கான பின்னணியில் உள்ள மனிதர் சுந்தர் பிச்சை என நம்பப்படுகிறது. ஆண்ட்ராய்டு, அவர் மேற்பார்வையில் உள்ள கூகுள் தயாரிப்புகளில் மார்ச் 13, 2013 ஆண்டில் சேர்க்கப்பட்டது. ஆண்டி ரூபின் அதற்கு முன்னர் ஆண்ட்ராய்டை நிர்வகித்து வந்தார். சுந்தர் பிச்சை ரூபா இன்க் ஆலோசகர் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றுகிறார், அவர் ஜிவ் சாப்ட்வேரின் தலைவராக ஏப்ரல் 2011 முதல் ஜூலை 2013 வரை இருந்தார்.

பிச்சை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆகஸ்ட் 10, 2015 அன்று நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு அக்டோபர் 24, 2014 இல் தயாரிப்பு தலைவராக அப்போது சிஈஓ வாக இருந்த லாரி பேஜ் ஆல் நியமிக்கப் பட்டார்.

2015 ஆம் ஆண்டில் $ 100.5 மில்லியனுக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sundar Pichai From Google's Product Manager to CEO

Sundar Pichai From Google's Product Manager to CEO
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X