ஏப்ரல் 1 முதல் உங்களுக்கு இந்த செலவுகள் எல்லாம் அதிகரிக்கும் என்று தெரியுமா..?
புதிய நிதி ஆண்டு நாளை முதல் துவங்கும் நிலையில் வரும் நிதி ஆண்டில் பல விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சேவைகளுக்கு எல்லாம் கட்டணம் உயர்த்தப்படுகின்றது, சிலவற்றுக்கு அபராதமும் விதிக்கப்பட உள்ளது. எனவே வரும் நிதி ஆண்டு முதல் ஏற்பட இருக்கும் மாற்றங்களை எல்லாம் உங்களுக்குத் தெரிவிப்பது எங்கள் கடமை ஆகும்.
சுகாதாரக் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு
புதிய நிதி ஆண்டு முதல் சுகாதாரக் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு பிரீமியம் தொகை உயர்த்தப்படும். இதற்கான அனுமதியை ஐஆர்டிஏ, காப்பீட்டு ஒழுங்குபடுத்தும் ஆணையம் வழங்கியுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கான மூன்றாம் தரப்பு காப்பீட்டுப் பிரீமியம் விலை 40 முதல் 50 சதவீதம் வரை வருகின்ற ஏப்ரல் 1 முதல் உயருகின்றது. முழு விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்க
பணப் பரிவர்த்தனை கட்டணம்
பணப் பரிவத்தனை வரம்பு 2 லட்சமாகக் குறைப்பு
2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கப் பணப் பரிவர்த்தனை செய்தால் சட்டவிரோதமது என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு பட்ஜெட் 2017-18-ஐ பிப்ரவரி 1-ம் தேதி அருண் ஜெட்லி அவர்கள் வாசித்த போது ரொக்கப் பணப் பரிவர்த்தனை 3 லட்சமாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது என்னவென்றால் வருமான வரிச் சட்டத்தில் இரண்டு லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்க.
வருமான வரி
வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் இனி காலதாமதமாக வரி தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். ஆனால் அது நடப்பு நிதி ஆண்டில் அல்ல, 2018-2019- நிதி ஆண்டு முதல்.
நிதி மசோதா 2017-ன் படி புதிய பிரிவு 234F-ன் கீழ் வருமான வரிச் சட்டத்தில் சரியான நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 2018-2019-ம் நிதி ஆண்டு முதல் அபராதம் விதிக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கு இளிக் செய்க.
அதுமட்டும் இல்லாமல் வருமான வரி செலுத்தும் போது வீட்டுக் கடன் மீதான வரி விலக்கு 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications