ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யாதவர்களின் கவனத்திற்கு..!

தொடரும் விலை போர்: ஏப்ரல் 15 வரை ஜியோ பிரைம் உறுப்பினராக மாறலாம் மற்றும் பல அதிரடி ஆஃபர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது முதல் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகள் வாரி வழங்கியது. இப்போது என்னவென்றால் ஜியோவின் வெல்கம் ஆஃபர் மற்றும் நியூ இயர் ஆஃபர்கள் முடிந்த நிலையில் மார்ச் 31-ம் தேதிக்குள் பிரைம் மெம்பராக மார வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்த ஜியோ ஏப்ரல் 15 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

 

அது மட்டும் இல்லாமல் மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் ரீசார்ஜ் செய்து மகிழலாம் என்றும் ஜியோ அறிவித்துள்ளது. இதனால் போட்டி நிறுவனங்கள் இடையில் நேரடியாக விலைப் போரில் ஈடுபட்டு வருகின்றது ஜியோ என்று கூறலாம்.

ஜூலை வரை ஆஃபர்

ஜூலை வரை ஆஃபர்

ஏப்ரல் 15-ம் தேதிக்குள் யாரெல்லாம் ஜியோ பிரைம் 99 ரீசார்ஜ் செய்கின்றார்களோ அவர்கள் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தல் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபரை ஜூலை வரை தொடர்ந்து பயன்படுத்தி மகிழலாம்.

சம்மர் சர்பிரைஸ்

சம்மர் சர்பிரைஸ்

இந்தச் சலுகை திட்டத்தின் பெயரை சம்மர் சர்பிரைஸ் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை ஜியோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் ரீசார்ஜ் செய்தால் போதும்

ஆகஸ்ட் ரீசார்ஜ் செய்தால் போதும்

ஜியோ பிரைம் ரீசார்ஜினை செய்த வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இந்தச் சம்மர் சர்பிரைஸ் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் மாதம் தான் அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
 

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

ஜியோ நெட்வொர்க்கின் பிரம் ஆஃபரில் இது வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்து இருப்பதாகவும், அது ஏப்ரல் 15-ம் தேதிக்குள் 100 மில்லியன் பயனர்களைக் கடக்கும் என்றும் ஜியோ எதிர்பார்க்கின்றது.

அம்பானி அறிவிப்பு

அம்பானி அறிவிப்பு

ஜியோ இலவச சேவை முடிவுறுகின்றது. ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யுங்கள் இல்லை என்றால் உங்களுக்கான சேவை துண்டிக்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைவர் முகேஷ் அம்பானி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிரடி ஆஃபரால் இலவசத்தைப் பயன்படுத்திய பிறகு தூக்கி எறிந்துவிடலாம் என்று இருந்த ஜியோ பயனர்களும் பிரைம் ஆஃபர் ரீசார்ஜ் செய்வார்கள் என்பது ஜியோவின் திட்டமாகும்.

 

தரம்படுத்தப்பட்டு வரும் சேவை

தரம்படுத்தப்பட்டு வரும் சேவை

ஜியோ நெட்வொர்க் சேவையில் பல தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதால் சேவையில் இடையூறுகள் அதிகமாக உள்ளன. இதனைப் போக்கும் வகையில் இன்னும் சில நாட்களில் பல மடங்கு சேவை தரம்படுத்தப்பட்டுவிடும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

கூடுதலாக 100,000 கோடி முதலீடு

கூடுதலாக 100,000 கோடி முதலீடு

ஜியோ நிறுவனத்திற்காக 200,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாதகும், வரும் மாதங்களில் தொலைத்தொடர்பு நெட்வோர்க் டவர்களுக்காக 100,000 கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

போட்டி நிறுவனங்களின் நிலை

போட்டி நிறுவனங்களின் நிலை

6 மாதங்களாக இலவச ஆஃபர்களை ஜியோ நிறுவனம் அளித்து வந்ததால் போட்டி நிறுவனங்களான வோடாபோன், ஐடியா, மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெறும் சிக்கல்கள் உருவாகி போட்டி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது மற்றும் சிறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானி 99 ரூபாய் பிரிமியம் ரீசார்ஜ் மற்றும் 149 ரூபாய் முதல் பிற ரீசார்ஜ் போக்குகளையும் அறிவித்திருந்தார்.

 

வருவாய் இழந்த போட்டி நிறுவனங்கள்

வருவாய் இழந்த போட்டி நிறுவனங்கள்

ஜியோவால் அக்டோபர்-டிசம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 55 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, இதுவே வோடாபோன் நிறுவனம் 1.9 சதவீதம் வரை சேவை வருவாயை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio pushes paid plan deadline to April 15, continues price war

Reliance Jio pushes paid plan deadline to April 15, continues price war
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X