3 வருட சாதனை: வரி ஏய்ப்பு செய்யப்பட்ட ரூ.1.37 லட்சம் கோடி கண்டுபிடிப்பு.. 3,893 பேர் கைது..!

3 வருட சாதனை: வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட ரூ.1.37 லட்சம் கோடி கண்டுபிடிப்பு.. 3,893 பேர் கைது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 3 வருடத்தில் இந்தியாவில் சுமார் 1.37 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதை நிதியமைச்சகம் கண்டுபிடித்துள்ளது

இந்தியாவில் வரி ஏய்ப்பு, கருப்புப் பணம் பறிமுதல் ஆகியவற்றை வருவாய் துறை மிகப்பெரிய அளவில் உறுதியான சட்டதிட்டங்களைக் கொண்டு அடக்கியுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரூ.1.37 லட்சம் கோடி

ரூ.1.37 லட்சம் கோடி

மேலும் இக்காலகட்டத்தில் வருமான வரி துறையினர் சுமார் 23,064 சோதனைகளைச் செய்துள்ளனர். இதன் மூலம் சுமார் 1.37 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

23,000 சோதனைகள்

23,000 சோதனைகள்

இதில் வருமான வரித்துறை 17,525 சோதனைகளும், சுங்கத்துறை 2,509 சோதனைகளும், மத்திய கலால் வரித் துறை 1,913 சோதனைகளும், சேவை வரித் துறை 1,120 சோதனைகளைச் செய்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு

இதன் பிடி மொத்த 1.37 லட்சம் கோடி ரூபாயில் வரி ஏய்ப்புத் தொகையில் வருமான வரித் துகை 69,434 கோடி ரூபாயும், சுங்கத்துறை 11,405 கோடி ரூபாயும், கலால் வரித் துறை 13,952 கோடி ரூபாயும், சேவை வரித் துறை 42,727 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கைப்பற்றியுள்ளது.

வழக்குகள்

வழக்குகள்

இந்த 3 வருடத்தில் வரி ஏய்ப்பில் ஈடிப்பட்டதாக 2,814 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 3,893 பேர் பெயரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை

அமலாக்கத் துறை

பணச் சலவை தடுப்பு பிரிவின் கீழ் அமலாக்கத் துறை இக்காலகட்டத்தில் 519 வழக்குகளைப் பதிவு செய்து, 396 சோதனைகளை நடத்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் 79 வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்யப்பட்டு 14,933 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத் துறை.

பினாமி சட்டம்

பினாமி சட்டம்

நவம்பர் 2016இல் இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட்ட பினாமி பரிமாற்ற மசோதாவில், 245 முறையற்ற பரிமாற்றங்கள் செய்யப்பட்டதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 124 வழக்குகள் தொடர்புடைய 55 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் இந்த 3 வருட சாதனையைப் பட்டியல்போட்டுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt detects Rs 1.37 lakh cr of tax evasion, 3,893 arrested in 3 years

Govt detects Rs 1.37 lakh cr of tax evasion, 3,893 arrested in 3 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X