மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை இந்த 5 நகரங்களில் மட்டும் தினமும் மாறும்..!
பொதுத் துறை நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்க நீண்ட காலமாகப் பேச்ச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்று நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இப்போது அதை உறுதி செய்யும் விதமாக மே 1-ம் தேதி முதல் முதல் கட்டமாக ஐந்து நகரங்களில் மட்டும் இத்திட்டம் அமலுக்கு வருகின்றது.
5 நகரங்கள்
எரிபொருள் விலை தினம் மாற்றும் திட்டம் புதுச்சேரி மற்றும் வைசாக், உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் மே 1 முதல் தினமும் மாறும்.
தங்கம், வெள்ளி விலை போன்ற திட்டம்
தங்கம், வெள்ளி, ரூபாய் மதிப்பு போன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இனி தினமும் பெட்ரோல் விலையை ஏற்றி இறக்கி இறவு 12 மணி முதல் அறிவிக்கும். இந்த விலை மாற்றம் உலகளாவிய எண்ணெய் விலையைப் பொருத்து மாறும்.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள்
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களிடம் மட்டும் இந்தியாவின் 95 சதவீத எண்ணெய் சந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் நிலையங்கள் எண்ணிக்கை
மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடமும் இந்த இந்து நகரங்களில் இருந்து மொத்தமாக 200 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.
சோதனை முயற்சி
முதலில் இந்து ஐந்து நகரங்களில் சோதனை அடிப்படையில் தினமும் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் போது இத்திட்டத்தினை தேசிய அளவில் அமலுக்குக் கொண்டு வரும்போது உள்ள சிக்கல்கள் என்னென்ன என்று ஆராய்ந்து சரி செய்யப்படும்.
இது குறித்துத் தகவலை எண்ணெய் நிறுவனங்களிடம் கேட்க முயன்ற போது பதில் அளிக்க மருப்பு தெரிவித்துவிட்டனர்.
தனியார் எண்ணெய் நிறுவனங்கள்
தனியார் துறை எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ், ஷெல், எஸ்ஸார் ஆயில் நிறுவனங்களும் இந்த நகரங்களில் தினமும் மாற்றி அமைக்கும் முறையை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications