இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்குச் செல்லும் போது ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் இங்கிலாந்தில் ஒரு கல்வியாளராக உயர்ந்தது மட்டும் இல்லாமல் ஆண்டின் சிறந்த ஆசிய பெண் தொழிலதிபர் பட்டத்தையும் பர்மிங்காம் விருது வழங்கும் விழாவில் இவர் பெற்றுள்ளார்.
மரியாதை
65 வயதான டேம் ஆஷா கெம்கா இப்போது மேற்கு நாட்டிங்ஹாம்ஷையர் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவர் கல்வித்துறையில் எடுத்த முடிவுகள் மற்றும் திறன்களினால் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ஆசிய வணிக விருதுகள் நிகழ்ச்சியில் விருது பெற்றுள்ளார்.
முடியாது என்று ஒன்று கிடையாது
ஆங்கிலம் தெரியாமல் இங்கிலாந்து சென்ற ஆஷா குழந்தைகள் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும், அங்குள்ள பிற குழந்தைகளின் அம்மாக்களுடன் பேசியே ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.
கல்லூரி விரிவுரையாளராரகப் பணிபுரிவதற்கு முன்பு இவர் கார்டிஃ பல்கலைக்கழகத்தில் வணிகப் பாடத்தில் பட்டம் பெற்றார், இப்போது மேற்கு நாட்டிங்ஹாம்ஷையர் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
பிரகாசித்த பிறந்த ஆஷா
பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமார்ஹி மாவட்டத்தில் பிறந்த ஆசா 13 வயதில் தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டார். அதுமட்டும் இல்லாமல் தனது 25 வயதில் கணவர் மற்றும் குழந்தையுடன் இங்கிலாந்து செல்லும் போது இவருக்கு ஆங்கிலமும் தெரியாது.
மிக உயர்ந்த விருது
2013-ம் ஆண்டுப் பிரிட்டிஷ் பேரரசு பிரட்டனின் மிக உயர்ந்த விருதான சிறந்த குடிமக்கள் விருதைப் பெற்றார்.
மிகவும் பெருமை!
மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் தான் 1931-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிறந்த குடிமக்கள் விருதைப் பெற்ற தார் மகாராணியான லட்சுமி தேவி பாய் சஹிபாவுக்கு அடுத்து இந்த விருதைப் பெற்றுள்ளார் என்பது இந்திய பெண்களுக்கு மிகவும் பெருமை பெறக் கூடிய ஒரு விஷயமாகும்.