டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2016-ம் ஆண்டிற்கான 4 வது காலாண்டு அறிக்கையைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. காலாண்டு அறிக்கை வெளியீட்டால் நிறுவனத்தின் பங்குகள் 0.53 சதவீதம் சரிந்து 2,308 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
டிசிஎஸ் காலாண்டு அறிக்கையில் எப்படி இன்ஃபோசிஸ் நிறுவனம் எதிர்பார்த்த லாபம் இல்லை என்றதோ அதே போன்று வருவாய் மற்றும் லாபத்தில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
நிகர லாபம்
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் 3வது காலாண்டுடன் ஒப்பிடும் பொது 2.51 சதவீதம் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், சென்ற காலாண்டு 6,778 கோடியாக இருந்த வருமானம் 6,608 கொடி ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இருப்பினும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016-2017 நிதி ஆண்டின் வருவாய் 4.23 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவித்துள்ளது.
செயல்பாடுகளில் இருந்து வருமானம்
டிசிஎஸ் நிறுவனம் நிறுவனத்தின் மொத்த விற்பனையிலும் 0.3 சதவீதம் அதாவது 29,945 கோடியாக இருந்த வருமானம் 29,642 கோடியாகச் சரிந்துள்ளதாகக் கூறியுள்ளது.
பங்குகள் மூலம் கிடைத்த வருமானம்
மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது 34.40 ரூபாயாக இருந்து ஒரு பங்கின் லாபம் 4 வது காலாண்டு அறிக்கையின் படி 33.52 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அறிவித்துள்ளது.
டிவிடெண்ட் - ஈவுத்தொகை
டிசிஎஸ் நிறுவனம் இறுதி ஈவுத்தொகையை ஒரு பங்கிற்கு 27.50 ரூபாய் என அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள்
டிசிஎஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வருவாய் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு நிலையான நாணய வருவாயாக 1.4 பில்லியன் டாலர் பெற்றுள்ளதாகவும், டிசிஎஸ் சீராக வாடிக்கையாளர்களை அதிகரித்து வருவதாகவும் அதனால் வருவாய் தரப்பு அதிகரித்து வருவதாகவும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் தெரிவித்தனர்.