உபர் இந்தியாவின் அடுத்த அதிரடி.. ஒரே நேரத்தில் பல கார்களைப் புக் செய்யலாம்....?
உபர், ஓலா நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் செயலிகள் மூலமாக டாக்ஸி சேவைகளை அளித்து வருகின்றன. இப்போது செயலிகள் கார் புக் செய்யும் ஒன் டு ஒன் அதாவது ஒரே கார் மட்டுமே புக் செய்யும் முறை தான் இருந்து வருகின்றது.
இதனை மாற்றி அமைக்க முடிவு செய்த உபர் டாக்ஸி நிறுவனம் உபர் சென்ட்ரல் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் மூலம் வணிக நிறுவங்கள் ஒரே நேரத்தில் பல கார்களைப் புக் செய்யலாம்.
உபர் சென்ட்ரல் என்றால் என்ன?
உபர் சென்ட்ரல் சேவை மூலமாக வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பல கார்களைப் புக் செய்யலாம், வாடிக்கையாளர்கள் மற்றும் கிளைண்ட் கட்டணங்களையும் புக் செய்பவர்களே செலுத்தும் சேவை ஆகும்.
இந்தச் சேவையின் மூலமாகப் புக் செய்பவர்கள் ஒரே நேரத்தில் பல கார்களை வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்களை ஏற்றிச் சென்று வெவ்வேறு இடங்களில் டிராப் செய்யும் ஆகும். தன் மூலம் ஒரே காரினை மீண்டும் மீண்டும் புக் செய்து பயன்படுத்தும் முறை இருக்காது.
இது எப்படி வேலை செய்கின்றது?
இந்தச் சேவை உபர் வணிகங்கள் தேர்வின் மூலம் அளிக்கப்படுகின்றது. இதனை டேப்ளட், உலாவிகள் என அனைத்திலும் பயன்படுத்த முடியும்.
உடர் செண்ட்ரல் நிறுவனங்கள் மற்றும் குழுக்களைக் கார்ப்ரேட் உபர் கணக்கை துவங்க அனுமதிக்கும்.
பல கார்களைப் புக் செய்யும் போது ஒவ்வொரு பயணங்களின் கட்டணத்தையும் தனித்தனியாக உபர் டெஸ்பேட்சர் கணக்கு பட்டியலிட்டு உங்களுக்குக் காண்பிக்கும்.
ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை?
நிறுவனங்கள் கார் புக் செய்து அனுப்பும் போது பயணம் செய்ய இருப்பவர்களிடம் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பயண நேரம், ஓட்டுநர் பெயர், வாகன எண், மாடல், ஓட்டுநர் மொபைல் எண் உள்ளிட்டவற்றைப் பயணிகளின் மொபைல் எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
வியக்க வைக்கும் சேவை
உலகளவில் கோல்ட்மேன் சாச்ஸ், டெல், வென்ண்டன், பைன் & கம்பெனி, ஏர்டெல், ஏ.டி.கிரெர்னி, ரிலையன்ஸ் ஏடிஏ குரூப் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட 65,000 நிறுவங்கள் உபர் ஃபார் பிஸ்னஸ் சேவையைப் பயன்படுத்தி வருவதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications