ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வருவாய் அளிக்கும் அட்சய பாத்திரமாக விளங்கிய ஹைதராபாத், தெலுங்கானா-ஆந்திர பிரிவினைக்குப் பின் ஹைதராபாத் தெலுங்கானாவிற்குச் சென்றதால் தொழில்நுட்ப சந்தையை வளர்க்க புதிய திட்டங்களும் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கத் துவங்கியுள்ளது ஆந்திர பிரதேச மாநிலம்.
இத்திட்டத்தின் மிகமுக்கியமாக அந்திர பிரதேசத்தின் தலைநகரமான அமராவதியில் சிங்கப்பூர் கூட்டமைப்புடன் இணைந்து 600 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் வளாகத்தை அமைக்க உள்ளது.
ஆந்திர பிரதேசம்
சிங்கப்பூர் கூட்டமைப்பு நிறுவனத்திற்கு (Asecndas-Singbridge) ஆந்திராவில் சுமார் 1,691 ஏக்கர் வளர்ச்சி திட்டத்திற்கான உரிமையாளராக அந்திர மாநிலம் நியமித்துள்ளது.
ஒப்பந்தம்
இத்திட்டத்தின் முதல் கட்டமாக 600 ஏக்கர் அளவில் முதல் வளர்ச்சி திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இப்பகுதியில் பெரிய நிதியியல் கோபுரம் மற்றும் ஸ்டார்ட் அப் ஏரியாவை அமைப்பதற்காக இந்தச் சிங்கப்பூர் கூட்டமைப்பு மற்றும் அந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
5 வருடம்
மேலும் இந்த முதற்கட்ட திட்டம் அடுத்த 5 வருடத்திற்கும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் பெங்களுரில் இருக்கும் ITPL போன்றே இருக்கும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
பெங்களுரில் இருக்கும் International Technology Park Limited (ITPL) பகுதியை உருவாக்கியும் இந்தச் சிங்கப்பூர் கூட்டமைப்பு தான்.
பைனான்சியல் டவர்
முதற்கட்டமான 600 ஏக்கர் திட்டத்தில் இதே பகுதியில் பைனான்சியல் டவர் அமைக்கும் பணியை Asecndas-Singbridge கூட்டணி துவங்க உள்ளதாக அந்திர பிரதேசம் கேபிடல் ரீஜியன் டெவலப்மென்ட் அத்தாரி தலைவர் கூறினார்.
முதலீடும் வேலைவாய்ப்பும்
இத்திட்டத்தில் மூலமாக இப்பகுதியில் சுமார் 1,25,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல் 1,25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications