இந்திய ஐடி நிறுவனங்களில், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், தனது வர்த்தகத்தைப் பாதிக்காத வகையில், மிகவும் சுயநலமாகச் சில குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த ஊழியர்களை மட்டும் உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியேற்ற ஐடி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளது.
ஏன் இந்தத் திடீர் முடிவு..? யார் இவர்கள்..?
பணிநீக்கம்
பன்னாட்டு சந்தைக்குத் தேவையான புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தாமல் அரைத்த மாவையே அரைத்த காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியும் சரி, வருவாயும் சரி தொடர்ந்து குறைந்த வண்ணமாகவே இருந்தது.
இந்நிலையில் ஆட்டோமேஷன் மூலம் ஐடி சேவையின் அடிமட்ட பணிகளை அனைத்தும் முடிக்கும் நிலையில் , இப்பிரிவில் இருக்கும் ஊழியர்கள் தற்போது தேவையற்றவர்களாக உள்ளனர்.
யார் இவர்கள்..?
இந்த வகையில் தற்போது சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன், மேனுவல் டெஸ்டிங் மற்றும் டெக்னால்ஜி சப்போர்ட் ஆகியவை ஆகிய பிரிவுகள் தற்போது தேவையற்ற பிரிவுகளாகக் கணக்கிட்டுள்ளது.
ஆட்டோமேஷன்
இப்பிரிவில் இருக்கும் பணிகள் அனைத்தையும் ஆட்டோமேஷன் செய்யப்பட உள்ளதாகப் பல ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதனால் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களையே முதற்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிகிறது.
அனுபவம்
மேலும் இப்பரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களின் சம்பளம் பிர பிரிவினரையும் காட்டிலும் குறைவானது. ஆகவே பிற பிரிவுகளில் இருக்கும் 5 முதல் 15 வருட அனுபவம் கொண்ட ஊழியர்கள் வெளியேற்ர ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக மனித வள பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பிரிவில் டீம் லீடு, பிராஜெக்ட் மேனேஜர் ஆகியோரும் இதில் அடங்குவார்கள்.
3 வருடத்தில்
அடுத்த 3 வருடத்தில் இந்திய ஐடி நிறுவனங்களில் மட்டும் சுமார் 1.75 லட்சம் முதல் 2 லட்சம் ஊழியர்களை வெளியேற்றப்படலாம் என ஹெட் ஹன்டர்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
56,000 ஊழியர்கள்
நடப்பு நிதியாண்டில் மட்டும் நிறுவனங்கள் அறிவிப்பின் வைத்து பார்க்கும் போது சுமார் 56,000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிகிறது.
மேலும் அடுத்த 3-4 வருடத்தில் தற்போது இருக்கும் ஐடி நிறுவன வேலைவாய்ப்புகளில் 50 சதவீதம் தேவையற்றதாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனமான மெக்கென்சி அண்ட் கம்பனி தெரிவித்துள்ளது.
அதிகப் பணிநீக்கம்
இதனைத் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் பெங்களுரூ, சென்னை போன்ற முக்கிய நகரங்களை விடவும், கோயம்புத்தூர், மைசூர் போன்ற 2ஆம் கட்ட நகரங்களில் இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
அட்டகாசமான ஐடியா..!
56,000 ஊழியர்கள்..
அதிகம் பாதிப்பு


Click it and Unblock the Notifications