அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அன்மையில் ஆசியா பெசிபிக் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1,400 ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாகக் கூறியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் இந்தியாவில் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அதிகப் பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 சதவீத ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
ஃபோர்டு நிறுவனம் அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் தங்களது நிறுவனத்தில் இருந்து ஊதியம் மற்றும் இதர செலவுகளைக் குறைக்கும் விதமாக 10 சதவீத ஊழியர்களை அமெரிக்கா மற்றும் ஆசிய பெசிபிக் நாடுகளில் இருந்து விருப்ப ஓய்வூடன் பெறும் தொகையை அளித்து வெளியேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் வரை காலக்கெடு
ஃபோர்டு நிறுவனத்தின் அறிக்கையின் படி 1,400 ஊழியர்கள் செப்டம்பர் இறுதிக்குள் வெளியேற்றப்படலாம் என்று கூறுகின்றது.
ஜூன் மாதம் முதல் ஊழியர்களுக்கு அறிவிப்பு
ஜூன் மாதம் முதல் இதற்கான ஆறிவிப்பு ஊழியர்களுக்கு வரும் என்றும், இந்தியாவில் இருந்து அதிக ஊழியர்கள் வெளியேற்றபட வாய்ப்பில்லை என்றாலும் செயல்பாடுகளில் இந்தியாவிற்கு அதிகப் பாதிப்பு இருக்கும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊழியர்கள் பிரிப்பு நடக்கப்படும் இடங்கள்
வட அமெரிக்கா மற்றும் ஆசிய பெசிபிக் பகுதிகளில் தான் அதிகளவில் திறன் படைத்த ஊழியர்கள் உள்ளதாகவும் அதனால் இங்குத் தான் ஊழியகள் பிரிப்பு நடவடிக்கை எடுக்க இருக்கின்றது என்றும் ஃபோர்டு கிரெடிட், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய தரவு மற்றும் பகுப்பாய்வுகள் ஆகியவற்றின் செயல்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.
இந்திய பிரிவில் அதிக விலக்கு
இந்தியாவில் இருந்து செயல்படும் பல நடவடிக்கைகளுக்கு விலக்கு உள்ளதால் ஊழியர்கள் வெளியேற்றம் குறைவாகத் தான் இருக்கும்.
மூன்று முக்கிய முடிவுகள்
ஃபோர்டு நிறுவனத்தின் முக்கிய வியாபாரத்தில் லாபத்தை அதிகரித்து உறுதிபடுத்தும் விதமாகவும், வியாபாரம் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து தோய்வை நீக்கி ஆக்ரோஷமாக முதலீடு செய்யும் விதமாகவும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய முடிவுகளில் கவனம் செலுத்துவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications