மும்பை: இந்தியாவின் நவினமயம் ஆக்கப்பட்ட தேஜாஸ் ரயில் சேவை மும்பையில் இருந்து கோவா பயணத்தைத் திங்கட்கிழமை துவங்கியது. விமானப் போன்று பல வசதிகளைக் கொண்ட இந்த ரயில் டிக்கெட்டின் விலை சதாப்தி ரயில் கட்டணத்தை விட அதிகமாகும்.
தேஜாஸ் ரயிலில் அப்படி என்ன தான் வசதிகள் உள்ளன, பாதுகாப்பு வசதிகள் எப்படி உள்ளது, எந்த வழித்தடத்தில் பயணிக்கின்றது, கட்டணம் எவ்வளவு என்று எல்லாம் இங்குப் பார்ப்போம்.
தேஜாஸ் ரயிலில் உள்ள வசதிகள்
தேஜாஸ் ரயிலில் முழுமையாகப் பயண விவரங்கள், வைஃபை, சிசிடிவி, தீ மற்றும் புகை கண்டறிதல் வசதிகள், தேநீர் மற்றும் காபி வழங்கும் இயந்திரம் போன்ற எண்ணற்ற அல்ட்ரா மார்டன் வசதிகள் உள்ளன. ஞயாயிற்றுக்கிழமை தேஜாஸ் ரயிலை மும்பை சத்திரபதி சிவாஜி டர்மினஸ் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே பொது மேலாளர் தேஜாஸ் ஒரு தரையில் பயணிக்கும் விமானம் என்று கூறினார்.
வேகம்
இந்தியாவின் முதல் பிரீமியம் ரயிலான தேஜாஸ் ஒரு மணி நேரத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
வடிவமைப்பு
காபுர்தாலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை இந்தப் பெட்டிகள் ஆட்டோமேட்டிக் டோர் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய புறநகர் அல்லாத ரயில்களில் ஆட்டோமேட்டிக் டோர் இதுவே முதல் முறை என்பது சிறப்பம்சம் ஆகும்.
வழி மற்றும் அட்டவணை
மழைக்காலம் இல்லாத போது மும்பை - கார்மாலி (கோவா) வழித்தடத்தில் வாரம் ஐந்து நாட்களும், மழைக் காலத்தின் போது வாரத்திற்கு மூன்று நாட்களும் தாதர், தானே, பன்வெல், ரத்னகிரி மற்றும் குடால் நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தம் அளிக்கப்படும்.
கொள்ளளவு
20 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 56 நபர்கள் அமரக்கூடிய ஒரு ஏசி சேர் கார் பெட்டி மற்றும் 78 நபர்கள் அமர்ந்து பயணிக்கக் கூடிய 12 ஏசி சேர் கார் பெட்டியும் இருக்கும்.
கட்டணம்
எக்சிகியூடிவ் சீட் கட்டண, உணவுடன் 2,680 ரூபாய், உணவு இல்லாமல் 2,525 ரூபாய் என ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது. ஏசி சேர் கார் பெட்டிகளில் உணவுடன் பயணிக்க 1,280 ரூபாயும், உணவு இல்லாமல் 1,155 ரூபாயும் கட்டணங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் எப்போது ரயிலில் வழங்கப்படும் பிற கேட்டரிங் சேவைகளும் வழங்கப்படும்.
பாதுகாப்பு அம்சங்கள்
அதிவேக ரயில் என்பதால் சஸ்பென்ஷன் அமைப்பு, தீ தடுப்பு அமைப்பு, புகை மற்றும் தீ கண்டறிதல் போன்ற பாதுகாப்பு முறைகள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் பயணிகளுக்கான ஜிபிஎஸ் காட்சி அமைப்பு திரையும் பொருத்தப்பட்டு இருக்கும்.
பிரெயில் உதவி
பார்வை இல்லா பயணிகளுக்காக இந்த ரயிலில் பிரெயில் உதவி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
சுத்தம்
ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை வசதி உள்ளது, அது மட்டும் இல்லாமல் கை உழர்த்திகள், நீர் நிலை குறிகாட்டி மற்றும் டச் பட்டன் தண்ணீர் சேவைக் குழைகள் உடன் பிற அம்சங்களும் உள்ளன.
பொதுமக்கள் வரவேற்பு
தேஜாஸ் ரயில் அறிமுகம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக மத்திய ரயில்வே கூறியுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய நிமிடங்களில் 207 பயணிகள் டிக்கெட் புக் செய்துள்ளனர் என்றும் அதில் 207 நபர்கள் ஏசி சேர் கார் சீட்டிற்கும், 10 நபர்கள் எக்சிகியூடிவ் வகுப்பிற்கும் என்றும் மத்திய ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் ஷேலேந்திர குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications