வருமான வரித்துறையின் அதிரடி வேட்டையில் சிக்கிய 600 கோடி ரூபாய்..!

டெல்லி: இந்தியாவில் கருப்புப் பணம், ஊழல், பினாமி பெயரில் இருக்கும் சொத்துக்களைக் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையை நடத்தி வருகின்றனர்.

கடந்த 6 மாதத்தில் செய்யப்பட்ட அதிரடி சோதனையில் வருமான வரித்துறையினர் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.

இதில் 240 வழக்குகளின் கீழ் சுமார் 400 பினாமி பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

 வருமான வரித்துறையின் அதிரடி வேட்டையில் சிக்கிய 600 கோடி ரூபாய்..!

இந்தியாவில் பினாமி தடை சட்டம் 1988ஆம் ஆண்டு முதல் முறையாக அறிவிக்கப்பட்டாலும் அது இன்று வரை அமலாக்கம் செய்யப்படாமல் இருந்தது. 28 வருடங்களுக்குத் தற்போது மத்திய அரசு இதனைப் புதுப்பிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பயன்பாட்டு தடைக்குப் பின் ஒரு வாரத்தில் அமலாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 வருமான வரித்துறையின் அதிரடி வேட்டையில் சிக்கிய 600 கோடி ரூபாய்..!

இதன் அமலாக்கத்திற்குப் பின் வருமான வரித்துறை செய்ய அதிரடி சோதனையில் மத்திய பிரதேசத்தில் ஒரு ஓட்டுநர் 7.7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைத் தனது பெயரில் வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் எவ்விதமான வர்த்தகமும் செய்யாமல் பெயருக்கு மட்டும் நிறுவனத்தைத் துவங்கி, இதன் மூலம் பல விலைமதிப்புடை சொத்துக்களை வாங்கி ஒரு கார்பரேட் ஊழியர்கள் செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இன்னும் பல அதிர்ச்சியூட்டும் மோசடிகள் இந்தச் சோதனையில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+