டாடா மோடார்ஸ் நிறுவனம் 2017 மார்ச் 31 வரையிலான 4 வது காலாண்டு அறிக்கையைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் 2015-2016 ஆம் நிதி ஆண்டு 4 வது காலாண்டில் பெற்ற 5,211 கோடி ரூபாய் நிகர லாபத்தை விட 2016-2017 நிதி ஆண்டுக் காலாண்டில் நிகர லாபம் 4,336 கோடியாகச் சரிந்துள்ளது.
சென்ற ஆண்டு 81,080 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 78,981 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
நிதி ஆண்டின் நிகர லாபம்
2017 மார்ச் 31-ம் தேதியோடு முடிந்த நிதி ஆண்டின் நிகர லாபம் சென்ற ஆண்டின் 11,678 கோடி ரூபாயில் இருந்து 35 சதவீதம் சரிந்து 7,557 கோடியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வருவாய்
அதனால் சென்ற ஆண்டு 2,78,546 கோடியாக இருந்த மொத்த வருவாய் 2,75,247 கோடியாகக் குறைந்துள்ளது.
ஜாகுவார் லாண்ட் ரோவர் வர்த்தகம்
அதே நேரம் டாடா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் லாண்ட் ரோவர் வர்த்தகம் 13 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஜாகுவார் லாண்ட் ரோவரின் மார்ஜின் 14.5 சதவீதமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜேஎல்ஆர் மார்ஜின் ஆச்சர்யமாக உள்ளது என்று ஷேர்கான் தெரிவித்துள்ளது.
ஜாகுவார் லாண்ட் ரோவரின் அதிக மார்ஜினுக்குக் காரணம்
ஜேஎல்ஆர் நிறுவனத்தின் மார்ஜின் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக ஃபோரெக்ஸ் உடன் இணைந்து செயல்படுவது என்கின்றனர்.
லாபம் சரிந்து பங்குச் காப்பாற்றிய பங்குச் சந்தை
செவ்வாய்க்கிழமை லாபம் சரிந்துள்ளதாக அறிவித்த போதிலும் டாடா மோடார்ஸ் நிறுவனத்தில் பங்குகள் விலை 5 சதவீதம் வரை உயர்ந்தே வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.