ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட விமான டிக்கெட் கட்டணத்தை 1,099 ரூபாய்க்கு பிரமோஷனல் ஆஃபராக அறிவித்துள்ளது.
ஏர்ஏசியாவின் இந்தப் பிக் சேல் ஆஃபரில் இணையதளம் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும். மேலும் இந்த ஆஃபர் மூலமாகப் பெங்களூரு, புனே, கொச்சி, டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் கோவா ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
சலுகை காலம்
ஏர்ஏசியாவின் இந்தப் பிக் சேல் ஆஃபரில் ஜூன் 11 வரை டிக்கெட் புக் செய்து 2018 ஜனவர் 15 முதல் 2018 ஆகஸ்ட் 28-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.
1,099 ரூபாய் விமான டிக்கெட் ஆஃபர்
ஏர்ஏசியா இந்தியாவின் இந்த 1,099 ரூபாய் விமான டிக்கெட் சலுகையில் கொச்சி-பெங்களூர், கோவா-பெங்களூர், குவஹாத்தி-இம்பால் மற்றும் ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
1,499 ரூபாய் விமான டிக்கெட்
1,499 ரூபாய் விமான டிக்கெட் மூலமாக ராஞ்சி-கொல்கத்தா, கோவா-ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
பிற வழித்தடங்கள்
ஹைதராபாத் முதல் கொச்சி வரை பயணம் செய்ய 1,699 ரூபாய் விமானக் கட்டணம் என்றும், டெல்லி-ஸ்ரீநகர் பயணம் செய்ய 1,799 ரூபாய் விமான டிக்கெட் கட்டணம் சென்றும் ஜெய்ப்பூர்-புனே செல்ல 2ம்699 ரூபாய் விமானக் கட்டணம் என்றும், கவுகாத்தி-பெங்களூரு செல்ல 2,799 ரூபாய் விமான டிக்கெட் கட்டணம் என்று ஏர் ஏசியா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1,098 ரூபாய் சலுகை
2018 ஜனவரி மாதத்தின் இடையில் கோவாவில் இருந்து பெங்களூரு செல்ல 1,098 ரூபாய் விமானக் கட்டணம் என்று, அதில் விமானக் கட்டணம், சேவை வரி, கூடுதல் கட்டணம், கிரிஷி கல்யாண் செஸ் மற்றும் ஸ்வச் பாரத் செஸ் உள்ளிட்டவையும் அடங்கும்.
சீட்டுகள்
ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் இந்தச் சலுகை விலையில் எத்தனை டிக்கெட்கள் என்று அறிவிக்கவில்லை. ஆனால் குறைந்த டிக்கெட்கள் மட்டும் தான் இந்தச் சலுகை விலையில் கிடைக்கும் என்றும், எல்லா விமானங்களிலும் இந்தச் சலுகை கிடைக்காது என்றும், இருக்கை உள்ளதைப் பொருத்து டிக்கெட் கட்டணம் மாறும் என்று அறிவித்துள்ளது.
உதான் திட்டம்
பிரமர் மோடி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உதான் திட்டத்தின் கீழ் 1 மணி நேரம் அல்லது 500 கிமி தொலைவிலான விமானப் பயணங்களுக்கு அதிகபட்ச கட்டணமாக 2,500 ரூபாய் என்ற முடிவு செய்யப்பட்டு அதற்கு 5 விமானப் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களும் இணைந்துள்ளன.
விமான டிராப்பிக்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவிக்கும் பல சலுகை காரணங்களால் 15.5 சதவீதம் வரை விமான டிராப்பிக் அதிகரித்துள்ளது என்றும் விமானப் போக்குவரத்துத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications