தென்கொரியா நாட்டின் முன்னணி மொபைல் நிறுவனமான சாம்சாங், இந்தியாவில் தனது மொபைல் தயாரிப்பு அளவை இரட்டிப்பாக அடுத்த 3 வருடத்தில் 5,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
சீனாவில் இந்நாட்டு நிறுவனத்திற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் தற்போது சாம்சங் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்
இந்நிறுவனத்தின் மொபைல் தயாரிப்பு தொழிற்சாலை உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் நிலையில், இதன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்கும் வகையில் நிறுவன வரிவாக்கம், அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்துதல் எனப் பல முக்கியத் திட்டங்களுடன் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
தென் ஆசிய
உலகளவில் மொபைல் தயாரிப்பிலும் விற்பனையிலும் முன்னணி நிறுவனமாகத் திகழும் சாம்சங் இந்தியாவில் செய்ய உள்ள முதலீட்டின் வாயிலாக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா சந்தையின் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில், இந்தியாவில் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
தென் கொரியா
சாம்சங் இந்தியாவில் செய்யப்பட்ட அதிகளவிலான முதலீடு இது, அதுமட்டும் அல்லாமல் ஒரு தென் கொரியா நிறுவனம் இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வதும் இதவே.
இந்திய சந்தை
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களும் உத்திர பிரதேசத்தில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது தான். இந்நிலையில் இப்புதிய முதலீட்டின் வாயிலாக இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் வெளிநாடுகளிலும் விற்பனையாக உள்ளது.
பிரிட்ஜ்
மேலும் சாம்சங் இந்தியா இந்தப் புதிய முதலீட்டு வாயிலாக இந்நிறுவனத்தின் பிரிட்ஜ் தயாரிப்பு எண்ணிக்கையும் இரட்டிப்பாக முடிவு செய்துள்ளது.
சென்னை
மேலும் இந்நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னையிலும் இருக்கிறது. ஆனால் முதலீட்டில் அதிகமான அளவு உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா தொழிற்சாலையிலேயே அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
ஜிஎஸ்டி
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களுக்கு ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்படும் ஜிஎஸ்டி வரி அதிகச் சலுகை உண்டு. இதனால் ஆப்பிள், சாம்சங் வரை பல பன்னாட்டு மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் தனது தொழிற்சாலையைத் துவங்கவும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications