டெல்லி: மத்திய அரசு தொடர்ந்து சில நாட்களாக அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் அன்று அறிவித்து வருகிறது. இதன்படி வரும் ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கார்டு கட்டாயம் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்து இருந்தார்
இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில், இன்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பில் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதே நேரம் ஆதார் அட்டையுடன் பான் கார்டினை இணைக்க வேண்டும் என்றும், இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது என்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளது. எனவே ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யம் முடியும் என்பது உச்ச நீதி மன்ற தீர்ப்பின் மூலம் முடிவாகியுள்ளது.