இந்தியாவில் கேப்பிடல் கூட்ஸ் மற்றும் நுகர்வோர் துறையின் தேவையும் முதலீடும் அதிகளவில் குறைந்த காரணத்தினால் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் உற்பத்தி, சுரங்கம் மற்றும் பவர் துறை அனைத்தும் சரிவை சந்தித்தது.
இதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 3.1 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது. கடந்த வருடம் இதேக்காலக்கட்டத்தில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவு 6.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்திருந்தது எனத் தலைமை புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஐஐபி அளவு ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாகக் குறையும் எனத் தலைமை புள்ளியியல் அலுவலகம் தனது முந்தைய கணிப்பு அளவான 3.75 சதவீத அளவை மாற்றி எழுதியது.
ஐஐபி அளவுகளில் உற்பத்தித் துறை சுமார் 77.63 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 5.5 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்த நிலையில், இந்த வருடம் வெறும் 2.6 சதவீதமாக உள்ளது.