ஐடி நிறுவனங்களும், ஊழியர்களும் இத்துறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், ஊழியர்களின் திடீர் பணிநீக்கம் உட்பட அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் புதிய செயல் திட்டத்தைக் கொண்டு வர உள்ளதாகக் கர்நாடக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியாங் கார்கே தெரிவித்துள்ளார்.
ஆனால் இவை அனைத்தும் ஐடி நிறுவன தலைவர்கள் மற்றும் இத்துறை ஊழியர்களிடம் ஆலோசனை செய்யதபின்பே இதற்கான திட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலில் இதுதான்..
மேலும் பிரியாங் கார்கே பேசுகையில் முதலில் ஐடி நிறுவனங்களின் அப்ரைசல் விதிமுறைகள் மற்றும் வடிவத்தை ஆய்வு செய்ய முடிவு எடுத்துள்ளோம். இதன் பின்னர்ப் படிப்படியாக அடுத்தக் கட்டங்களுக்குச் செல்ல உள்ளோம் எனத் தெரிவித்தார்.
செயல் திட்டம்..
இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வை ஒரு தரப்பை மட்டும் கேட்டு முடிவு எடுக்க முடியாது, ஒட்டுமொத்த துறையில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து தெளிவான செயல் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். நான் இத்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு மட்டும் பொறுப்பு அல்ல, வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பு உண்டு என் கூறினார் கார்கே.
ஊழியர்கள்
ஐடி ஊழியர்கள் கர்நாடகாவில் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களிலும் ஐடி நிறுவனங்களின் அப்ரைசல் வெளிப்படையாக இல்லை, இது ஊழியர்களின் செயல்திறனுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது எனக் கருத்து நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல ஐடி ஊழியர்கள் FITE அமைப்பின் வாயிலாக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.
குற்றச்சாட்டு
தற்போதைய நிலையில் ஐடி நிறுவனங்கள் செயல்திறன் அடிப்படையில் தான் ஊழியர்கள் வெளியேற்றுகிறது என்று கூறுவது அனைத்தும் பொய், அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களை மட்டுமே வெளியேற்றி வருகிறார்கள்.
அதன் மூலம் நிறுவனம் அதிகளவிலான செலவுகளைக் குறைத்து லாபத்தில் கணக்கு காட்ட முடியும்.
FITE அமைப்பு
சமீபத்தில் FITE அமைப்பு உறுப்பினர்கள் கர்நாடக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியாங் கார்கே அவர்களைச் சந்தித்த போது, இத்துறையில் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், பணிநீக்கம் உட்பட அனைத்தையும் விரைவில் சட்ட ரீதியாகத் தீர்க்க உள்ளதாக அவர் உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில்
ஐடி ஊழியர்களின் பணிநீக்கம் தமிழ்நாட்டில் பல ஐடி நிறுவனங்கள் 10, 15 வருடங்கள் அனுபவம் கொண்ட ஊழியர்களை வெளியேற்றியது நாம் பார்த்தோம்.
ஆனால் இதுகுறித்துத் தமிழக அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழகத் தகவல் தொழில்நுட்ப அமைர்ச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் தனிப்பட்ட முறையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விரைவில் இதற்குத் தீர்வு காணப்பட்டால் இந்தியாவில் 150 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தை கொண்ட ஐடி துறைக்கு அதிகளவிலான வர்த்தகப் பங்கை அளிக்கும் தமிழ்நாட்டின் வரி வருமானம் காப்பாற்றப்படும்.
புதிய 500 ரூபாய்
அமேசான் தினறல்
ஏர்டெல், வோடாபோன்
உடனே செஞ்சிடுங்க..!
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை: முன்னோடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications