டெல்லியில் வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு ரிஸ்க் இருக்கின்றது என்றால் சென்னையில் என்ன நிலைமை தெரியுமா?
ஒரு நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றால் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கும்.
ஒன்று நிறுவனத்தின் நிதி மேலாண்மை சரிந்து இருக்கும் அல்லது செயல்திறன் குறைவாக இருக்கும். ஆனால் வேலைப் பறிபோவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன.
உதாரணத்திற்கு நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள், எந்தத் துறை சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்பதைப் பொருத்தும் பணி நீக்கத்தில் சிக்க வாய்ப்பு உண்டு.
ஆய்வு
டீம்லீஸ் என்ற நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில் இந்தியாவின் பிற முதல் தர நகரங்களில் பணிபுரிபவர்களை விட டெல்லியில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணி நீக்கத்தில் சிக்கி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது.
9 நகரங்கள்
இந்த ஆய்வினை நடத்திய நிறுவனம் இந்தியாவின் 9 முக்கிய நகரங்களான அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் நடத்தியுள்ளது.
எந்தத் துறை சார்ந்த ஊழியர்களுக்கு அதிக ஆபத்து
ஒவ்வொரு துறையைச் சார்ந்த ஊழியர்களைப் பொருத்து ரிஸ்க் அதிகமாகின்றது, குறைகின்றது. கட்டுமானம், ரியல் எஸ்டேட், பிபிஓ மற்றும் ஐடி சார்ந்த சேவை துறைகளில் பணியில் உள்ள ஊழியர்களுக்கு அதிக ரிஸ்க் உள்ளது.
கவலைப்படத் தேவையில்லாத துறைகள்
சில்லறை வணிகம்; வங்கி, நிதி சேவைகள் & காப்பீடு; வேகமாக நகரும் நுகர்வோர் மற்றும் நீடித்த பொருட்கள்; சக்தி & ஆற்றல்; மற்றும் வேளாண்மை மற்றும் வேளாண்மை, விருந்தோம்பல், ஆட்டோமொபைல் மற்றும் கூட்டு நிறுவனங்கள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை மிதமான வேலை இழப்பு அபாயத்தைக் கொண்டுள்ளன.
இப்போது எந்த நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு எல்லாம் அதிக ரிஸ்க் என்ற பட்டியலை இங்குப் பார்ப்போம்.
#1வது இடம்
டெல்லி
#2வது இடம்
பெங்களூரு
#3வது இடம்
ஹைதராபாத்
#4வது இடம்
அகமதாபாத்
#5வது இடம்
மும்பை
#6வது இடம்
சண்டிகர்
#7வது இடம்
சென்னை
#8வது இடம்
கொல்கத்தா
#9வது இடம்
பூனே


Click it and Unblock the Notifications