நாக்பூர்: இந்திய ஐடி நிறுவனமான எச்சில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நாக்பூரில் உள்ள குலோபல் ஐடி மையத்தில் 2,000 நபர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
தனி வழியில் எச்சிஎல்
பிற இந்திய ஐடி நிறுவனங்களைப் போன்று இல்லாமல் எச்சிஎல் நிறுவனம் சிறிய நகரங்களில் தனது பயிற்சி மையத்தை நிறுவி வருகின்றது. ஏற்கனவே எச்சிஎல் நிறுவனத்தின் பயிற்சி மையம் மதுரை மற்றும் லக்னோவில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாக்பூரில் தரமாக உள்ளூர் ஆட்களுக்குத் திறமை மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புகளை வழங்க உள்ளது என்று எச்சிஎல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சஞ்சய் குப்தா தெரிவித்தார்.
2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
50 ஏக்கர் நாக்பூர் வளாகத்திற்கு வருகின்ற ஜனவரி மாதம், நாக்பூர் மாடல் இண்டெர்னேஷ்னல் கார்கோ ஹப் மற்றும் ஏர்போர்ட் டெக் பார்க்கில் மூன்று கட்டங்களாக 2,000 நபர்களுக்கு வேலைகள் வழங்கப்படும்.
நாக்பூர்
"நாக்பூரில் எங்கள் அலுவலகத்தைத் தொடங்குவதில் நாங்கள் உற்சாகமாக உள்ளோம், இந்த முயற்சியினால் இங்கு 2,000 வேலைகளை உருவாக்க விரும்புகிறோம், உள்ளூர் திறமைசாலிகளுக்கு இது இரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
18 மாதத்தில் 3 வது விரிவுபடுத்தும் முயற்சி
ஏற்கனவே கடந்த 18 மாதங்களில் செப்டம்பர் மாதம் மதுரை மற்றும் அக்டோபர் மாதம் லக்னோவில் தங்களது செயல்பாடுகளைத் துவங்கியுள்ளதாகவும் இது எங்களது மூன்றாவது விரிவு படுத்தும் முயற்சி என்றும் தெரிவித்தார்.
எச்1-பி விசா சிக்கல் எச்சிஎல் நிறுவனத்திற்கு இல்லை
ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியில் அடைந்து வரும் தொய்வு மற்றும் அமெரிக்காவில் உள்ள சிக்கல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த குப்தா எச்சிஎல் நிறுவனம் அதிகளவில் அமெரிக்க வணிகத்தை நம்பி இல்லை என்றும் அதான் எச்1-பி விசால் சிக்கல் இல்லை, உள்நாட்டில் தான் அதிக ஊழியர்கள் உள்ளதாகவும் அதனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறினார்.