மும்பை: நாட்டின் முன்னணி பயணிகள் விமானச் சேவை அளிக்கும் ஜெட் ஏர்வேஸ், தனது விமானத்தில் பிறந்த குழந்தைக்குப் பரிசாக வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமானத்தில் பயணிக்கும் சலுகையை அளித்து அசத்தியுள்ளது.
35,000 அடி உயரம்
ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட ஜெட்ஏர்வேஸ் 9W 569 விமானத்தில் கர்பமான பெண் பயணித்தார், 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருக்கையில் அந்தப் பெண்ணிற்குப் பிரசவ வலி எடுத்தது விமானத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது.
தாயும் சேயும் நலம்
இதன் காரணமாக 2.55 மணிக்குத் தாமம் நகரில் இருந்து புறப்பட்டுக் கொச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் மும்பையில் அவரத்தின் காரணமாகத் தரையிறக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
முதல் குழந்தை
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதால், இக்குழந்தைக்கு இந்நிறுவனம் பரிசாக வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமானத்தில் பயணிக்கும் சலுகையை அளித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
இந்திய பயணிகள் விமானச் சேவை சந்தையில் இண்டிகோ நிறுவனத்திற்கு அடுத்தபடியாக 17.6 சதவீத வாடிக்கையாளர்களைக் கொண்டு 2வது இடத்தில் இருக்கிறது ஜெட் ஏர்வேஸ்.
இந்நிறுவனம் தனது 300 விமானங்களை உலகில் சுமார் 68 இடங்களுக்கு விமானச் சேவை அளித்து வருகிறது. மேலும் பன்னாட்டு சேவை அளிப்பதில் இந்திய விமான நிறுவனங்களில் ஜெட் ஏர்வேஸ் முன்னோடி.