மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் புதிதாக 30 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, பொதுவாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டத்தில் மெத்தனம் காட்டும் அரசு இந்த முறையில் சுமார் 4 நகரங்களை ஸ்மார்ட்சிட்டி உருவாக்கும் திட்டத்தில் சேர்த்துள்ளது.
இதனுடன் மத்திய அரசு சுமார் 30 நகரங்களைச் சேர்த்து அறிவித்துள்ளது.
90 நகரங்கள்
மத்திய அரசின் மிகப்பெரிய ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் இதுவரை சுமார் 90 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த முறை வெளியிடப்பட்டுள்ள 30 நகரங்கள் அடங்கிய ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் முதல் இடத்தையும், சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய தலைநகரான நயா ராய்பூர் 2வது இடம் பிடித்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர்
இப்பட்டியலில் அதிரடி அறிவிப்பாக மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் ஜம்மு மற்றும் காஷ்மீர் இடம்பெற்றுள்ளது.
இப்பட்டியலின் விபரத்தை மத்திய நகர வளர்ச்சி அமைச்சர் வெங்கைய நாயடு வெளியிட்டார்.
40இல் 30 மட்டுமே..
இந்த முறை சுமார் 40 நகரங்களின் பெயரை வெளியிடத் திட்டமிட்ட மத்திய அரசு, பட்டியலில் இடம்பெற்ற நகரங்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மிகவும் குறைவான மதிப்பீட்டைப் பெற்றது.
இதனால் 40 நகரங்களை அறிவிக்க வேண்டிய இடத்தில் வெறும் 30 நகரங்களை மட்டுமே வெளியிட்டுள்ளார் வெங்கைய நாயடு.
முதலீடு
இந்த 30 நகரங்களின் ஸ்மார்ட்சிட்டி தரத்திற்கான வளர்ச்சிக்காக மத்திய அரசு சுமார் 57,393 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு திட்டமிட்டுள்ளது.
இதுவரை 90 ஸ்மார்ட்சிட்டிகளுக்குச் சுமார் 1,91,155 கோடி ரூபாய் முதலீட்டை அறிவித்துள்ளது.
அடிப்படை திட்டங்கள்
தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 30 நகரங்களில் ஏழை மக்களுக்கான குடியிருப்புத் திட்டங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட சாலைகளைக் கொண்டு வரை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டிவீட்
இதுக்குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயடு வெளியிட்ட டிவீட்
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications