ஈபிஎப்ஓ அமைப்பு 5 வங்கிகளுடன் கூட்டணி.. இனி நிமிடத்தில் பணம் கிடைக்கும்..!

ஒய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ அமைப்புப் பிராவிடென்ட் தொகையைப் பெறவும், ஓய்வூதிய தொகையை ஓய்வூதியதாரருக்கு செலுத்தவும் 5 வங்கிகளுடன் கூட்டணி அமைந்துள்ளது.

இதன் பிடி ஈபிஎப்ஓ அமைப்பு பாங்க் ஆஃ பரோடா, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

சேமிப்பு

சேமிப்பு

இப்புதிய ஒப்பந்தத்தின் மூலம் வங்கிகளின் உதவிகளின் வாயிலாக ஈபிஎப்ஓ அமைப்பு தனது உறுப்பினர்களுக்குப் பணத்தை அனுப்புவதையும் தாண்டி முதலீட்டுகளைக் கவனித்துக்கொள்ளவும் உதவி செய்ய உள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு இந்த அமைப்பு சுமார் 125 கோடி ரூபாய் சேமிக்க உள்ளது.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

மேலும் நிறுவனங்கள் இந்த 5 வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், இவ்வங்கிகளின் வாயிலாக ஊழியர்களின் பிஎப் கணக்கில் நேரடியாகப் பணத்தை வைப்புச் செய்யலாம். அதுவும் இணைய வங்கி வாயிலாகவே செய்து விடலாம் என ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

செலவு

செலவு

இதற்கு முன் ஈபிஎப்ஓ அக்ரிகேட்டர் வாயிலாகப் பணத்தை அனுப்பி வந்தது, அதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு 12 ரூபாய் என வருடத்திற்குப் பரிமாற்ற கட்டணமாகவே சுமாக் 350 கோடி ரூபாயை செலவு செய்தது.

செலவுகள் பாதியாகக் குறைந்தது

செலவுகள் பாதியாகக் குறைந்தது

இதன் பின் ஈபிஎப்ஓ அமைப்பு பஞ்சாப் நேஷ்னல் வங்கி, அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்து இணைய வங்கி வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதன் மூலம் செலவின் அளவு 175 கோடி ரூபாயாகக் குறைந்தது.

புதிதாக 7 வங்கிகள்

புதிதாக 7 வங்கிகள்

தற்போது செய்யப்பட்ட கூடுதல் 5 வங்கிகள் மூலம் இதன் அளவு 50 கோடி ரூபாயாகக் குறையும் என ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈபிஎப்ஓ சேவை சிறப்பாக இருக்க மேலும் 7 வங்கிகளுடன் கூட்டணி அமைக்கத் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+