திறமையான ஊழியர்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான கிரீன் கார்டு பெற இந்தியர்கள் 12 வருடங்கள் வரை காத்திருப்புப் பட்டியலில் உள்ளார்கள். அதே நேரம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் அதிகளவு கிரீன் கார்டு பெற்றவர்கள் இந்தியர்கள் தான் அதிகம்.
2015-ம் ஆண்டு மட்டும் மொத்தமாக 36,318 இந்தியர்கள் நிரந்தரமாக அமெரிக்காவில் வசிப்பதற்கான கிரீன் கார்டினை பெற்றுள்ளார்கள். அதில் 27,798 நபர்கள் புதிதாக அமெரிக்கா சென்றவர்கள் ஆவார்கள்.
12 வருட காத்திருப்பு
"வேலைவாய்ப்புத் தொடர்பான பிரிவில், இந்தியாவில் இருந்து நிரந்தர வாழ்விடம் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் தற்போது 12 வருடங்கள் காத்திருக்கிறார்கள், வேறுவிதமாகக் கூறினால், 2005 ஆம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு தற்போது நடைமுறைப்படுத்துகிறது" என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
வேலைக்காகச் சென்று கிரீன் கார்டு பெற்றவர்கள்
பெவ் அறிக்கையின் படி 2010-2014 வரையிலான காலக் கட்டத்தில் 36 சதவீதத்தினர் ஊழியர்கள் வேலை சம்மதமாகச் சென்று கிரீன் கார்டு பெற்றுள்ளதாகவும் அதில் 222,000 நபர்கள் எச்-1பி விசா வழியாகப் பெற்றவர்கள் என்று கூறுகின்றது.
கிரீன் கார்டு
கிரீன் கார்டு என்பது அமெரிக்காவில் நிரந்தரமாக வாழ மற்றும் வேலை செய்ய ஒரு நபரின் குடியுரிமைக்காக வழங்கப்படுவதாகும். கிரீன் கார்டு வைத்திருப்பவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுவே அமெரிக்கக் குடிமகனை திருமணம் செய்தால் இந்தக் காலம் மூன்று ஆண்டுகளுக்குக் குறையும்.
வயது
கிரீன் கார்டு பெறுபவர்களில் அதிகமானவர்கள் 25 முதல் 64 ஆண்டுகள் அமெரிக்காவிலேயே பணிபுரிந்தவர்கள் என்றும் புதியவர்கள் மிகவும் குறைவு என்றும் கூறப்படுகின்றது. 55 சதவீதம் வரை புதிதாக அமெரிக்கா வந்தவர்களுடன் ஒப்பிடும் போது கிரீன் கார்டு பெற்றுள்ளவர்களின் வயதும் 25 முதல் 64 வயதிற்குள் உள்ளவர்கள் என்று அறிக்கை கூறுகின்றது.
அதிகரித்து வரும் கிரீன் கார்டு விநியோகம்
அறிக்கையின் படி 2004-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசிக்கக் கிரீன் கார்டுடன் குடியுரிமை அளிப்பது அதிகரித்து வருகின்றது என்று கூறுகின்றது.
2015-ம் ஆண்டு 508,716 நபர்கள் புதியவர்களாகக் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவில் சட்டப்பூர்வமான நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களாக மாறியுள்ளதாகவும், 542,315 நபர்கள் தங்களது நிலையைச் சரி செய்துள்ளதாகவும் அற்க்கை கூறுகின்றது.
எச்-1பி விசா
2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நிதியாண்டிலும், புதியதாக அமெரிக்கா வருபவர்களை விட அதிகளவில் எச்-1பி விசா பெற்று வந்துள்ளவர்களுக்கு வழங்கியுள்ளது.
நிலையை மாற்றி அமைத்தல்
2004 ஆம் ஆண்டு முதல், 7.4 மில்லியன் மக்கள் தங்கள் நிலையை மாற்றி அமைத்துள்ளனர் என்றும் 5.5 மில்லியன் மக்கள் புதிதாக வந்து கிரீன் கார்டு பெற்றுள்ளவர்கள் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலையை மாற்றி அமைத்துள்ளார்கள் என்றால் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டது ஆகும்.
வேலைவாய்ப்புப் பிரிவுகள்
வேலைவாய்ப்புத் தொடர்பான பிரிவுகளில் (தொழிலாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் உட்பட) 2015 ஆம் ஆண்டுக் கிரீன் கார்டு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக உள்ளது.
அகதிகள்
அகதிகள் (11 சதவீதம்) மற்றும் புகலிடம் வழங்கப்பட்ட மக்கள் (3 விழுக்காடு) ஆகியோர் இதேபோன்ற கிரீன் கார்டுகளை அமெரிக்காவில் பெற்றுள்ளனர்.
தாழ்வான நாடுகள்
வரலாறு ரீதியாகத் தாழ்வான இடத்தில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் 5 சதவீதம் வரை கிரீன் கார்டு பெற்றுள்ளார்கள்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications