ரிலையன்ஸ் ஜியோ-விற்கு போட்டியாக ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் பல அதிரடி ஆஃபர்கள், தள்ளுபடி அறிவித்து ஒட்டுமொத்த டெலிகாம் நிறுவனத்தையே புரட்டி போட்டது. இதன் அதிர்வுகளே இன்னும் குறையாத நிலையில், ஜியோ உடனான சண்டை மீண்டும் வீதிக்கு வந்துள்ளது.
ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் ஜியோ-வின் அறிமுக காலம் முதலே தொடர்ந்து சண்டை போட்டு வருகிறது. தற்போது இந்த சண்டை புதிய உச்சதை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
டிராய்
செவ்வாய்கிழமை டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஒரு வொர்க் ஷாப் நடத்தியது. இதில் ரிலையன்ஸ் ஜியோ இந்திய டெலிகாம் துறையில் இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ் விதிப்பதை முழுமையாக நீக்கி விட வேண்டும். இதன் மூலம் இந்திய டெலிகாம் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என பரிந்துரையை வைத்தது.
அதிரடி எதிர்ப்பு
ஜியோ நிறுவனத்தின் இந்த பிரிந்துரைக்கு ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது மட்டும் அல்லாமல் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஜியோ நிறுவனத்தின் பரிந்துரைக்கு நேர் எதிராக கோரிக்கை விடுத்தது.
ஜியோவின் இந்த பிரிந்துரைக்கும், ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்களின் எதிர்ப்புக்கும் முக்கிய காரணம் உண்டு.
ஜியோ
இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ஜியோ தனது 80 சதவீத அழைப்புகளை பிற நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட இண்டர்கனெக்ஷன் பாயின்ட் மூலமாக மட்டுமே இணைத்து வருகிறது. இதற்காக ஜியோ அனைத்து நிறுவனங்களுக்கும் இணைப்பு கட்டணம் அதாவது யூசர் சார்ஜ் அளித்து வருகிறது.
முழுமையான நீக்கம்
இது ஜியோ நிறுவனத்தின் செலவுகளில் மிகப்பெரிய ஒன்று. இத்தகைய செலவு செய்ய காரணம் ஜியோவிடம் முழுமையான டெலிகாம் டவர் இணைப்புகள் இல்லை.
இதனை முழுமையாக நீக்கவே ஜியோ டிராய் அமைப்பிடம் பரிந்துரை செய்தது.
இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ்
இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ் என்பது, அழைப்பு உருவாக்கப்படும் நிறுவனம் இணைக்கப்படும் நிறுவனத்திற்கு 14 பைசா கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
ஆதாவது ஜியோ நிறுவனத்தில் இருந்து நீங்கள் ஏர்டெல் நம்பர் கொண்டு நபருக்கு அழைத்தால், ஜியோ ஏர்டெல் நிறுவனத்திற்கு 14 பைசா அளிக்க வேண்டும். இதுவே இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ்.
யாருக்கு லாபம்..?
இந்த முறையின் மூலம் யார் பெரிய நெட்வொர்க் வைத்துள்ளார்களோ அவர்களுக்கே அதிக லாபம். இது போன்ற டெலிகாம் நெட்வொர்க் இல்லாத நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் புதிய மற்றும் சிறு டெலிகாம் நிறுவனங்களுக்கு இது பெரிய சுமையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வு தேவை..
இந்நிலையில் ஜியோவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது இருக்கும் 14 பைசா என்ற அளவை மாற்றி குறைந்தபட்சம் 30 பைசாவாக உயர்த்த வேண்டும் என ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளது.
டிராய் முடிவு..
எதிர்ப்புகள் வலுத்த நிலையில் டிராய் அமைப்பு இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ் அளவை மாற்றப்படாது என அறிவித்துள்ளது
வருவாய் இழப்பு
ஒரு நிறுவனம் மற்ற நிறுவனத்திற்கு அழைப்புகளை இணைக்கும் போது, அதற்கான கட்டணத்தை தத்தம் நிறுவனம் செலுத்த வேண்டும். இதனால் ஏற்படும் இழப்பீடு மிகவும் அதிகம் என்பதால் இதற்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஏர்டெல், ஐடியா, வோடபோன் கூறியது.
இந்த கட்டணத்தை குறைத்தால், டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் மேலும் பாதிக்கப்படும்.
வியாழக்கிழமை
டிராய் அமைப்பு இதற்கான ஆலோசனையை வியாழக்கிழமை நடத்த உள்ளது. இதில் டெலிகாம் நிறுவனங்களின் கட்டண விதிப்புகளை ஆய்வு செய்து அதன் பின் இறுதி முடிவுகளை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது டிராய்.
டிராய் ஜியோவின் பரிந்துரைக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிட அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications