இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் சுமார் 11 கோடி பேர் விவசாய துறையல்லாத பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இதை வகைப்படுத்தாத அதாவது Unorganised sector என்று அழைக்கப்படுகிறது.
தற்போது இத்துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்து வரும் காணத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய ஓட்டை விழும் என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.
6.3 கோடி நிறுவனங்கள்
இந்த வகைப்படுத்தாத துறையில் மட்டும் சுமார் 6.3 கோடி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் ஒரு நிறுவனம் கூட நிறுவன சட்டம் அல்லது தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரவில்லை.
அதுமட்டும் அல்லாமல் 6.3 கோடி நிறுவனங்களில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வருகிறது.
நாட்டின் உற்பத்தி
இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் 82 சதவீகம் வீட்டிலேயே அல்லது வீட்டிற்கு வெளியில் இருக்கும் இடத்தில் இயங்கி வருகிறது. மேலும் இதில் 98 சதவீத நிறுவனங்கள் வருடம் முழுவதும் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சக்திவாய்ந்த வகைப்படுத்தாத துறையின் உற்பத்தி அளவின் மதிப்பு மட்டும் 11.5 லட்சம் கோடி ரூபாய்.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்
2015-16ஆம் நிதியாண்டில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் சுமார் 3 லட்சம் நிறுவனங்களை ஆய்வு செய்தது. இதேபோன்ற ஆய்வை 2010-11ஆம் நிதியாண்டிலும் நடத்தியது NSSO அமைப்பு.
இந்த இருகாலக்கட்டங்களை ஒப்பிடுகையில், நிறுவனங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதாவது 57 லட்சம் நிறுவனங்கள் புதிதாக உருவாகியுள்ளது. ஆனால் அச்சரியம் அளிக்கும் வகையில் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
3 சதவீதம் என்றால் தோராயமாக 33 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே இத்துறையில் புதிதாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
சம்பளம்
அதேபோல் இந்த 5 வருட காலத்தில் இத்துறையில் இருக்கும் ஊழியர்களின் சம்பள அளவுகள் 86 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. 2010-11ஆம் நிதியாண்டில் சராசரியாக வெறும் 4,000 ரூபாயாக இருந்த மாத சம்பளம் 2015-16ஆம் நிதியாண்டில் இது 7,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
நம்பிக்கை
இந்த வகைப்படுத்தாத துறையை மைக்ரோ, ஸ்மால், காட்டேஜ் என பல பிரிவுகளில் பரிக்கலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாகவும், வேலைவாய்ப்பு சந்தைக்கு உயிர் நாடியாக இருக்கும் இத்துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தொர்ந்து குறைந்து வருகிறது.
பிரச்சனை
இத்துறையில் பணப்புழக்கம், கடன் வசதிகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை எப்போதுமே குறைவு தான். இதனாலேயே தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் வர்த்தக பாதிப்பில் உள்ளது இத்துறை.
இதன் காரணமாகவே புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
36 சதவீத நிறுவனங்கள்
வகைப்படுத்தாத துறையில் இருக்கும் 6.3 கோடி நிறுவனங்களில் 36 சதவீத நிறுவனங்கள் உற்பத்தி துறையை சார்ந்து உள்ளது. மேலும் 50 சதவீத நிறுவனங்கள் உத்திர பிரதேசம், வங்காளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மோடி
இத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்பு பிரச்சனையை களைய மோடி தலைமையிலான மத்திய அரசு ஆலோசனை செய்ய துவங்கியுள்ளது.
ஜிஎஸ்டி
இந்தியாவில் ஜிஎஸ்டி அதாவது சரக்கு மற்றும் சேவை வரி வருவதற்கும் இவர்கள் தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா..? ஆனால் அதுதான் உண்மை.
வாட்டிவதைக்கும் 'ஜிஎஸ்டி'
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications