வருமான வரி தாக்கல் செய்யும் போது கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரிப் பணம் திரும்ப வேண்டாம் என்றால் வங்கி விவரங்களை என்ஆர்ஐ-கள் அளிக்க வேண்டாம்.
என்ஆர்ஐ-கள் இந்தியாவில் வசிக்காமல் வெளிநாடுகளில் வசித்துக் கொண்டு இந்தியாவிலும் வரி செலுத்த வேண்டும் என்ற போது அவர்கள் செலுத்தும் கூடுதல் வரிப் பணம் திரும்ப வேண்டாம் என்றால் வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டாம் என்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. அது குறித்து முழு விவரங்களை இங்குப் பார்ப்போம்.
விருப்ப முறை
வெளிநாட்டு வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்பது ஒரு விருப்ப முறை தான் என்றும் தேவை என்றால் அளிக்கலாம் என்று 157வது வருமான வரி தின விழாவில் பங்கேற்ற மத்திய நேரடி வரி விதிப்பு ஆணைத்தின் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக வெளிநாட்டு வங்கி கணக்கு எப்போது தேவை?
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறுகையில் ஐடிஆர்-2 படிவத்தின் கீழ் என்ஆர்ஐ-கள் கூடுதலாகச் செலுத்திய வரியை திரும்பப் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக வெளிநாட்டு வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்றார்.
ஒரு நிபந்தனை
வருமான வரி தாக்கலின் போது கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரி திரும்ப வேண்டும் என்ற ஒரு நிபந்தனைக்காக மட்டும் வங்கி விவரங்களை அளிக்கவும் என்று சந்திரா கூறினார்.
ஐடிஆர்-2
2017 மார்ச் 31-ம் தேதி முதல் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் புதிய ஐடிஆர் படிவங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி ஐடிஆர்-2 படிவத்தில் வெளிநாட்டு வங்கி கணக்கு விவரங்களை என்ஆர்ஐ வருமான வரி செலுத்துனர்கள் செலுத்த வேண்டும்.
வரி தாக்கல் செய்யக் கடைசித் தேதி
2016-2017 நிதி ஆண்டிற்கான வருமான வரி செலுத்த கடைசித் தேதி ஜூலை 31 ஆகும்.