நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைத்து அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள படி, இன்று முதல் சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி 2 வகையாக விதிக்கப்பட உள்ளது, இதன் மூலம் இரட்டை வட்டி விதிப்புகள் அமலுக்கு வந்துள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு
இப்புதிய மாற்றத்தின் படி 1 கோடி ரூபாய்க்குக் குறைவாக வைப்பு நிதி வைத்திருக்கும் கணக்குகளுக்கு 3.5 சதவீத வட்டி மட்டுமே அளிக்கப்படும், இதற்கு முன்பு இது 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
4 சதவீத வட்டி
மேலும் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சேமிப்புக் கணக்குகளில் இருப்பு வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குகள் மீது 4 சதவீத வட்டியை அளிக்கிறது.
சாமானியர்களுக்குப் பாதிப்பு
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சுமார் 95 சதவீதம் பேர் 1 கோடி ரூபாய்க்கு குறைவாகத் தான் வைப்பு நிதியை வைத்துள்ளனர். இவர்களை (சாமானியர்கள்) மையமாக வைத்தே எஸ்பிஐ வங்கி இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வட்டி வருமானம்
இந்த வட்டி மாற்றத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் வட்டி பணம் அதிகளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைத்த முதல் வங்கியும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.
பிற வங்கிகள்
எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பின் மூலம் சந்தையில் இருக்கும் பிற பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்புகள் மிகவும் அதிகம்.