தமிழக அரசு திங்கட்கிழமை ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயினை விட அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு எல்லாம் இனி பொது விநியோகம் மூலம் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.
எனவே நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் உள்ள எந்த மக்களுக்கு எல்லாம் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் மற்றும் யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற முழுப் பட்டியலை இங்குப் பார்ப்போம்.
நகர்ப்புற பகுதிகளில் யாருக்கெல்லாம் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும்
1. ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தக் குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை இடப்பட்டுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
2. அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களா கொண்ட குடும்பங்கள்.
3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.
4. முதியோர் உதவித் தோகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயனாளிகள்
5. விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்துக் குடும்பங்கள்.
6. மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்திற்கும் மிகுதியாக உடன் ஊனம் இருக்க வேண்டும்) லுடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
7. குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாடஹ்வர்கள், வேலை இல்லாதவர்கள், வேலைத் திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பறும் ழை பயனாளிகள்.
கிராமப்புற பகுதிகளில் யாருக்கெல்லாம் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும்
1. ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தக் குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை இடப்பட்டுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
2. அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களா கொண்ட குடும்பங்கள்.
3. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.
4. முதியோர் உதவித் தோகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயனாளிகள்
5. விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்துக் குடும்பங்கள்.
6. மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்திற்கும் மிகுதியாக உடன் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
7. விவசாயக் கூலி தொழிலாளர்கள் கொண்ட குடும்பங்கள்
8. மக்கள் நிலை ஆய்வு (participatory ideniification of poor)ன் கீழ் கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்கள்
யாருக்கெல்லாம் ரேஷன் கடைகளில் இருந்து பொருட்கள் வழங்குவதில் இருந்து நீக்கப்படும்
1. வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்
2. தொழில்வரி செலுத்துபவர்கள் உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்
3. பெறு விவசாயிகள் (5 ஏக்கருக்கு மேல் நிலை வைத்துள்ளவர்கள்) என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்.
4. மத்திய/மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள்/ மத்திய/மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
5. நான்கு சக்கர மோட்டார் வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிகப் பயன்பாட்டிற்கா தினசரி வாழ்வாதாரத்திற்கு வைத்துள்ள குடும்பங்கள் நீங்கலாக)
6. குளிர் சாதான கருவி வைத்துள்ள குடும்பங்கள்
7. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை மேற்கூரை மற்றும் கவிர்களைக் கொண்ட வீடுகள்.
8. பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்
9. அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் 1,00,000 ரூபாய்க்கும் அதிகமாக உள்ள குடும்பங்கள்