சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய ரத்துச் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்த 24 மணி நேரத்தில் அனைவருக்கும் ரத்து செய்யப்பட மாட்டாது என்று பல்டி அடித்துள்ளது மத்திய அரசு.
இது குறித்துச் செவாய்க்கிழமை மாநிலங்கள் அவையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கும் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பெறும் எதிர்ப்பு
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்துச் செய்யப்போவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதற்கு நேற்று முதல் எதிர்க்கட்சிகள் பெறும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.
எதிர் கட்சிகள் அமளி
இநிலையில் மாநிலங்கள் அவையில் இன்று எதிர் கட்சிகள் மத்திய அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு
அதற்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய பெட்ரோல் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது என்றும் ஒவ்வொரு மாதமும் 4 ரூபாய் மானியம் குறைக்கப்பட்டு மார்ச் மாதம் முதல் முழுவது ரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கடும் எதிர்ப்புகள் எழுந்தால் பரிசீலிக்கப்படும்
இதுவே, இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழும் பட்சத்தில் சிறிது காலாம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு எப்போது வரை வழங்குவது என்பது பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் இந்த அமளி அர்த்தமற்ற
மேலும் எதிர்க்கட்சிகளின் இந்த அமளி அர்த்தமற்றது என்றும் மானியம் அனைவருக்கும் ரத்து செய்யப்பட மாட்டாது ஆனால் யாருக்கெல்லாம் அளிக்கலாம் என்பதில் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதிக்கும் என்றும் கூறினார்.
மானியம் எவ்வளவு வழங்கப்படுகின்றது?
தற்போது பொது மக்கள் மானியத்துடன் பெறும் 14.2 கிலோ சிலிண்டர்களுக்கு 475 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்துகின்றனர். இதுவே ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் என்ற வரம்பை மீறும் போது மானியம் இல்லாமல் 564 ரூபாய் செலுத்தி சிலிண்டர்கள் பெற வேண்டும்.