சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய ரத்துச் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்த 24 மணி நேரத்தில் அனைவருக்கும் ரத்து செய்யப்பட மாட்டாது என்று பல்டி அடித்துள்ளது மத்திய அரசு.
இது குறித்துச் செவாய்க்கிழமை மாநிலங்கள் அவையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கும் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பெறும் எதிர்ப்பு
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்துச் செய்யப்போவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதற்கு நேற்று முதல் எதிர்க்கட்சிகள் பெறும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.
எதிர் கட்சிகள் அமளி
இநிலையில் மாநிலங்கள் அவையில் இன்று எதிர் கட்சிகள் மத்திய அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு
அதற்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய பெட்ரோல் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது என்றும் ஒவ்வொரு மாதமும் 4 ரூபாய் மானியம் குறைக்கப்பட்டு மார்ச் மாதம் முதல் முழுவது ரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கடும் எதிர்ப்புகள் எழுந்தால் பரிசீலிக்கப்படும்
இதுவே, இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழும் பட்சத்தில் சிறிது காலாம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு எப்போது வரை வழங்குவது என்பது பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் இந்த அமளி அர்த்தமற்ற
மேலும் எதிர்க்கட்சிகளின் இந்த அமளி அர்த்தமற்றது என்றும் மானியம் அனைவருக்கும் ரத்து செய்யப்பட மாட்டாது ஆனால் யாருக்கெல்லாம் அளிக்கலாம் என்பதில் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதிக்கும் என்றும் கூறினார்.
மானியம் எவ்வளவு வழங்கப்படுகின்றது?
தற்போது பொது மக்கள் மானியத்துடன் பெறும் 14.2 கிலோ சிலிண்டர்களுக்கு 475 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்துகின்றனர். இதுவே ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் என்ற வரம்பை மீறும் போது மானியம் இல்லாமல் 564 ரூபாய் செலுத்தி சிலிண்டர்கள் பெற வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications